Anandha Barathi
வள்ளல் பெருமானின் மாணாக்கர் - திருஅருட்பா தொண்டர் - புதுவை வேலு
திருஅருட்பா வரலாற்றில் வள்ளல் பெருமானின் மாணாக்கர் - திருஅருட்பா தொண்டர் - புதுவை வேலு குறித்துத் தொழுவூர் வேலாயுதனார் பாடியது

(புதுவை வேலு)

தரவு கொச்சகக் கலிப்பா

விற்புருவம் நெறித்தருளி வீறடங்கப் புரம்பொடித்த
பொற்புருவச் சிலையாளி புண்ணியநீற் றன்புடையான்
அற்புருவன் அருட்பிரகா சப்பெருமான் திருவருட்குச்
சொற்புதுவை வேலையன் றனைத்துணையாத் துணைகொண்டு. (56)

உரை:

வில் போன்று புருவங்களை நெரித்து, திரிபுராந்தகர்களின் மும்மலச் செருக்கு அடங்கத் திரிபுரங்களைப் பொடியாக்கி, பொன்மலையையே வில்லாக்கிய சிவபெருமானின் புண்ணியமாகும் நெறியோ திருநீற்று நெறி, அத்திருநீற்று நெறிக்கு அன்புடையவர் புதுவை வேலு முதலியார் என்பவர், அன்புருவமான திருஅருட்பிரகாசப் பெருமானின் திருவருளை துணையாகக் கொண்டும் புகழ்மிகும் புதுச்சேரி அவ்வேலையரின் உதவியைத் துணையாகக் கொண்டும் திருஅருட்பா அச்சிடும் பணி தொடங்கலாயின.

 

Image2673.jpg

Image2673.jpg

3 Comments
TMR RAMALINGAM
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Thursday, October 24, 2013 at 17:07 pm by TMR RAMALINGAM
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Pl unmarried widowwidelyni presumevvada
LuraT e sure sAnmarghees selection kcomicaL weAkervtobdeserving caSes by inner command gets selection is ossicle hAving trAvelled
Friday, November 16, 2018 at 21:38 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Hariharan Elumalai
அரிய தகவல்கள் & புகைப்படம். நன்றிகள் பலப்பல. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Saturday, November 17, 2018 at 01:05 am by Hariharan Elumalai