தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
அன்புடையீர், வளமோடு இன்புற்று வாழ்க!
இன்று ஞாயிற்றுக் கிழமை (16.04.2017), அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் நடத்திய நேரலை (worldwide live-event) நிகழ்வில், திருச்சி புலவர்.அருள்.செல்வராசன் ஐயா அவர்கள், "உலகப் பொது மார்க்கமாகிய சுத்த சன்மார்க்கம் ஏன் தமிழில் அருளப்பட்டது ?" - என்ற தலைப்பில் ஆற்றிய அருமையான சொற்பொழிவை நம்மவர்களுக்காக இங்கே அதன் ஒலிப்பதிவை பகிர்வு செய்துள்ளோம்!
இன்றைய நேரலை இணைப்பில் எதிர்பாராத வகையில் நிறைய துண்டிப்புகள் ஏற்பட்டது. ஆகையால், இன்றைய நேரலை நிகழ்வை முழுமையாகத் தொகுத்து "YouTube" - மூலமாக விரைவில் இங்கே வெளியிடுகின்றோம்.
நன்றி, வணக்கம்! சுபம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
வள்ளலார் யுனிவர்சல் மிஷன்,
அமெரிக்கா
Vallalar Universal Mission,
USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan
s1 (2).jpg
s2 (2).jpg
வள்ளற் பெருமான்...இறைவனை இலகுவாக அறிந்து கொள்ள ஏற்பட்ட மொழிகளிலே..தமிழே..சிறந்த மொழி என்பார்.
புலவர் திரு அருள் செல்வராசன் ஐயா அவர்கள்..தமிழின் சிறப்பினை மிக உயர்வான நிலையில் இந்தச் சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார்கள்.சன்மார்க்கத்தைத் தமிழுடன் தொடர்பு படுத்திப் பேசியுள்ளார். அருமையான சொற்பொழிவு. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இந்த சொற்பொழிவினைக் கேட்டு இன்புற வேண்டும் என்பது கோரிக்கை.
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
வானின்றுவந்து வாழ்வுதரும் வான்மழைஓர் அமிழ்தமேஞான
வானின்றுவந்து சாகாவாழ்வு தரும்தமிழோ அதனினும்இனிது
வானின்றுவந்த அடைமழைபோல் நம்தமிழின் தனிச்சிறப்பை
வானமெலாம் வாழ்த்த மடைதிறந்து பேசியநம்ஐயாவாழ்கவே!
புலவர்.அருட்திரு.செல்வராசன் ஐயா அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...