www.vallalarspace.com/durai
பெற்றதுபிறர்பால் நிற்காது முடிந்தநல்லருட்பணிசெய்து நிற்கவே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

என்பும் பிறர்க்குஎன அருள்வழி வாழ்கின்ற
அன்பறிவு ஒழுக்கம் உடையீர் வணக்கம்பல
நலமொடு நற்செல்வங்கள் எலாம்மிகும் நல்வாழ்வில்
வளமொடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்கவே!

நாய்க்கும் எனக்கும் ஒப்பிடில் நாய்தான்மிகமேலென்பேன்
பொய்க்கும் பெரும்ஒதியேன் உத்திரத்திற்கும் நான்உதவேன்
நோய்க்கும் என்பருவுடலை வளர்க்கவே நினைந்துதிருவருள்
காய்க்கும் அந்தத்தனிவண்ணம் ஒருசிறிதும் அறியாதசிறியேன்
கல்லாத நடையினேன் உயிர்க்கருணை ஒன்றும்மிலேன்ஆயினும்
நல்லார்கள் புகழ்கின்றஅருட் பெரும்பதியின் அகப்பற்றொடுநம்
எல்லோரும் வளமொடு இன்புற்றிருக்கவேஎண்ணி வேண்டுவனே
அல்லாமல் வேறோர்எந்தப் புறப்பற்றும் இங்குநான்அறிந்திலனே!

எற்றேஇது அவசியம் அவசியமென்றே சிற்றளவேயான்முயன்று
சற்றேபற்பல அரைகுறைக் கலையொடு இயற்பியல்விஞ்னாமும்
கற்றேன்அது இக்காலத்தின்சூழலோ கடவுளின் திருவருட்செயலோ
கற்றுஅடியேன் உலகியல்பட்டங்கள் ஒருசிலவும் பொருள்செய்யப்
பெற்றேனாயினும் ஒருசிறிதளவும் அப்பட்டம்பொருளில் பற்றிலேன்
உற்றேன் இயற்பியல்ஆசிரியப்பணி இவ்வுலகில் பன்நாடுகளிலே
பெற்றேன்அதனால் சிறுபொருளும் அறமுடன் கைவரப்பெற்றேன்
பெற்றதுபிறர்பால் நிற்காது முடிந்தநல்லருட்பணிசெய்து நிற்கவே!

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நேயமுடன்,
துரை சாத்தணன்