DAEIOU - தயவு
10.5.2017 பெங்களூரில் உள்ள அல்சூரில் திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெறல்.
     வரவிருக்கும் சித்திரா பெளர்ணமி நாளான, 10.5.2017 (புதன் கிழமை) பெங்களூரில் உள்ள அல்சூரில், திரு அருட்பா இசைக் கச்சேரியினை நடத்துவதற்கு, திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றார். நடைபெறும் இடம்..குறித்த விவரம்.

ஏற்பாடு: சங்கீத் சாகர் கல்சுரல் ட்ரஸ்ட் மற்றும் வேதாத்திரி மகரிஷி K.R. புரம் S.K.Y ட்ரஸ்ட் மற்றும் லக்‌ஷ்மிநாராயணபுரம் சன்மார்க்க சங்கம் ஆகியவை இவ்விழாவினை இணைந்து நடத்துகின்றன.

நடைபெறும் இடம்: ராம ஆஸ்ரமம், பழைய மெட்ராஸ் ரோடு, அல்சூர், பெங்களூர், பின் கோடு 560008.
பாலாஜி ஆலயம் மற்றும் அல்சூர் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகில்.

நேரம் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

திருபுவனம் ஆத்மநாதன் அவர்களுடன் சுமார் 35 பேரும், வாத்திய இசைக் கருவிக் கலைஞர்களும், இந்த நிகழ்ச்சியினை நடத்தவுள்ளனர்.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென அவர் கேட்டுக் கொள்கின்றார்.

மேலும், பெங்களூரில் உள்ள சன்மார்க்க அன்பர்கள், சன்மார்க்க சங்கங்கள் ஆகியவை இந்த அருமையான நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்து நல்ல முறையில், இதனை நடத்த உரிய உதவிகள் செய்யும்படியும் திரு ஆத்மநாதன் கேட்டுக் கொள்கின்றார்.
20140224_102739~2.jpg

20140224_102739~2.jpg