DAEIOU - தயவு
இலங்கை சாவகச்சேரி சத்திய ஞான கோட்ட விழாவிற்குச் செல்பவர்களின் கவனத்திற்கு...
     அன்பர் திரு கேதீஸ்வரன், சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கு என்ற இடத்தில், சத்திய ஞான கோட்டம் கட்டி, சன்மார்க்க நெறி பரப்பி வருகின்றார். அவர், கடந்த 2006ஆம் ஆண்டில், 100 பிரதிகள் திரு அருட்பா திருமுறைகள், வசன பாகம் இன்ன பிற சன்மார்க்க நூல்கள் என்பவற்றையெல்லாம், திண்டுக்கல்லில் வாழ்ந்த ஒரு அன்பர் மூலமாக, கப்பல் மூலம்..அவற்றை, இலங்கைக்குச் சென்று சேர்த்து, சாவகச்சேரியை ஒட்டியுள்ள பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் என்று பல இடங்களுக்கும் கொடுத்து சன்மார்க்க நெறி பரவுவதற்குக் காரணமாயிருந்தார். கொண்டு சென்ற அனைத்து திரு அருட்பா திருமுறைகள், வசன பாகம் ஆகியவை தீர்ந்து விட்டதாக அவர் தற்போது தெரிவிக்கின்றார். படிப்பதற்கு ஒரு சில பிரதிகள் மட்டுமே, சத்திய ஞான கோட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, வரவிருக்கும் 21.,8.2017 முதல் 3.9.2017 வரையில் அங்கு நடைபெறும் விழாவிற்கு, இந்தியாவிலிருந்து செல்லும் அன்பர்கள், மூலம் திரு அருட்பா புத்தகங்களைக் கொடுத்து விட வேண்டியுள்ளது. எனவே, அங்கு செல்லும் அன்பர்கள், தமது பயண் நாள், எந்த விமான நிலையத்திலிருந்து (மதுரை, திருச்சி, சென்னை) செல்கின்றனர் என்ற விபரத்தைத் தெரிவித்தால், அவர்கள் மூலம் இலங்கைக்கு திரு அருட்பா திருமுறைகள் மற்றும் சன்மார்க்க சங்கம் சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் கொடுத்து விட இயலும். இந்தியாவை அடுத்த ஒரு நாட்டில், சன்மார்க்கம் பரவுவதற்கு, அன்பர் திரு கேதீஸ்வரன் பெரு முயற்சி எடுத்து வருகின்றார். இருப்பினும், சன்மார்க்க அன்பர்களாலான உதவிகளை அவருக்குச் செய்ய வேண்டியுள்ளது.  வேறு எந்த வகையில் அவர் விரும்பாவிடினும், திரு அருட்பா பதிகங்களை, அங்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, செல்லும் அன்பர்கள் தாம் என்று, எங்கிருந்து செல்கின்றனர் என்ற விபரத்தைத் தெரிவிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
20141011_090356-1.jpg

20141011_090356-1.jpg