DAEIOU - தயவு
7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய நாட்களில், வடலூரில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கக் கட்டிடம் திறப்பு விழா நடைபெறல்.
     கடந்த பல ஆண்டுகளாக,, மதுரை மாவட்ட சன்மார்க்க அன்பர்கள் வடலூர் சென்றால், அங்கு தங்குவதற்கு என, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம் ஒன்று இல்லாதிருந்தது.  கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், அப்போதைய மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரி கோவிந்தன் தலைமையில், அனைத்து அன்பர்களின் பேராதரவோடு, பெங்களூர் சன்மார்க்க சங்கத்திற்கு எதிரில், 7 செண்ட் இடம் வாங்கப்பட்டது. அந்த நிலத்தில், தற்போது, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம் கட்டப்பட்டு வருகின்றது. பல்வேறு அன்பர்களின் பேருதவி மற்றும் பெரு முயற்சியால், அதன் துவக்க விழா, வரவிருக்கும் 7.2.2020 வெள்ளிக் கிழமை அன்று சன்மார்க்கக் கொடி கட்டி, துவங்கவுள்ளது. திரு டி.ஆர்.ஜவஹர்லால், முன்னாள் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், சன்மார்க்கக் கொடியினை ஏற்றுவதற்கு இசைந்துள்ளார். இந் நிகழ்ச்சியில், அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, மதுரை மாவட்ட தற்போதைய சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் கேட்டுக் கொள்கிறார்.
vlcsnap-2018-08-03-16h26m29s756.png

vlcsnap-2018-08-03-16h26m29s756.png