DAEIOU - தயவு
4.7.2020 அகில உலக சன்மார்க்க சங்கங்கள் ஒருங்கிணைப்புக்கான இணைய வழி முயற்சி மேற்கொள்ளுதல்.
    திரு பாலகிருஷ்ணன், படப்பை அவர்கள் மாநில சன்மார்க்க சங்கத் தலைவர் ஆவார். ஆத்தூர் டாக்டர் திரு வெற்றிவேல் அவர்கள் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். 4.7.2020 அன்று இரவு 7.30 மணி அளவில், ஆடியோ மூலம் எல்லா மாவட்டங்களைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. (Free conference Call). கீழ்க்காணும் சன்மார்க்க அன்பர்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தக் கலந்துரையாடலில் பேசினர். உலக முழுவதிலுமுள்ள சன்மார்க்க சங்கங்களை ஒருங்கிணைப்பது பற்றியும், நடைமுறை நிர்வாகத்தை, இன்னும் சிறப்பாக மேம்படுத்துவது குறித்தும், தங்களது கருத்தைத் தெரிவிக்குமாறு, தலைவர் திரு பாலகிருஷ்ணன் அவர்களும், மாநிலப் பொதுச் செயலாலர் திரு வெற்றிவேல் அவர்களும் கேட்டு க் கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலுமிருந்து அவரவர்கல்ள் மாவட்டத்தின் தற்போதைய நிலவரம், ஒருங்கிணைப்பு போன்ற ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக் கொண்டதன் பேரில், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

க்லந்து கொண்டோர் விபரம்.
1) திரு பாலகிருஷ்ணன், படப்பை, மாநிலத் தலைவர்.
2) டாக்டர் திரு வெற்றிவேல் ஆத்தூர் மாநிலச் செயலாளர்.
3) திரு சத்தியராஜ், தூத்துக்குடி.
4) திரு ரவிகுலராமன், மறைமலை நகர்.
5) திரு சத்திய மூர்த்தி, திருமுல்லை வாயில்.
6) திரு உமாபதி,
7) திரு தமிழ் வேங்கை, விழுப்புரம்.
8) திரு முருகானந்தம், ஆஸ்திரேலியா.
9) திரு சுந்தரராஜன்.
10) திரு சசிகுமார், விழுப்புரம்.
11) திரு சந்திரன், திண்டுக்கல்.
12) திரு ராமானுஜம், மதுரை.
13) திரு சவுந்தரராஜன், வழக்குறைஞர், பெரம்பலூர்.
14) திரு மனோகர், மணிமங்கலம்.
15) திரு தனபால், நாமக்கல்.
16) திரு ஞான சேகர்.
17) திரு ஆஞ்சநேயன், பெங்களூர்.
18) திரு கோபாலகிருஷ்ணன், சென்னை.
19) திரு கோதண்டபாணி, பாண்டிச்சேரி.

    வரவிருக்கும் 9.7.2020 முதல், 30 நாட்கள், தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலுமிருந்து, ஒவ்வொரு நாள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் (தமது கருத்துக்களைத் தெரிவிக்க) ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், 15 நாட்கள், வெளி நாடுகளில் உள்ள சன்மார்க்க சங்கங்கள் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும் என அக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. வரும் 5.7.2020ந் தேதியிலிருந்து, ஒவ்வொரு நாளும், (இந்திய நேரம்) இரவு 7.00 மணி முதல்  8.30 மணி வரையிலும் அனைவரும், இந்த (free conference call) கலந்துரையாடலில் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்கள், மேலான யோசனைகளைத் தெரிவிக்க வேண்டுமென மாநிலத் தலைவரும், மாநிலச் செயலாளரும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் தகவல் வேண்டுவோர்..தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண்.

மாநிலச் செயலாளர் திரு வெற்றிவேல், ஆத்தூர்..98427 25039.


20150119_184350.jpg

20150119_184350.jpg