Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள்.31.நான்காம் அதிகாரம்..கடவுள்.சுவாமி சரவணானந்தா.
உலகுயிர்க் கெட்டாதே  உண்ணின் றெவையும்
இலகுற வோங்கு மிறை.

_________________________________________________________
________________________________________________________-_

குறள் விளக்கம்.

     மெய்யறிவு கொண்டும், மெய்யன்பு கொண்டும், கண்டு கொள்ளப்படுவது கடவுள்.  ஆதலின், இவ்வதிகாரம் அவற்றிற்கு அடுத்து வந்துள்ளதாம்.

    உலகுயிர்கள் எல்லாம் விளங்கி ஓங்கச் செய்து கொண்டிருக்கும் ஒன்று கடவுள். புறத்தோற்றத்தில் கண்டு கொள்ளப்படாது. அகத்தே மறைந்து நின்று அருள் செய்கின்றதால் கடவுள் என்று குறிக்கப்படுகின்றார், நம் பதி.
20150405_082857.jpg

20150405_082857.jpg