Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள எண்.46...ஐந்தாம் அதிகாரம்..கடவுள்..சுவாமி சரவணானந்தா.
அழுது அகங்குழைந் தன்பானார் போற்றித் 
தொழுந்தெய்வம் யாதுநீ சொல்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

குறள் விளக்கம்.

     அன்பே லட்சியமாகக் கொண்டு உருகி, அகங்காரம் ஒழிந்து, தேகப்பற்றற்று, தயா வண்ணமானவர்கள் போற்றி வணங்குகின்ற தெய்வம் எது ?

    இக பர போகங்களைத் தரவல்ல தெய்வங்களே எல்லாம் தன்னாணையின்படி ஆட்டி வைக்கும் ஒன்றான கடவுளை அன்பருளாற் கண்டு கொண்டவர்கள், அக்கடவுளைத் தொழுவதே அன்றி பிற தெய்வந் தொழார்கள்.
IMG_20160406_120452.jpg

IMG_20160406_120452.jpg