Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருவருளே....உண்மைக் குரு...சுவாமி சரவணானந்தா.
    உண்மைக் குருவாக உள்ளவர், உண்மையில் அகநின்று ஒளிரும் அருள் ஒளி வடிவாய்த் திகழ்கின்றவராய் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர், தம்மைத் தாமே காட்டிக் கொள்ளார்..விளம்பரப் படுத்திக் கொண்டிருக்க மாட்டார்..பெயருக்கும், புகழுக்கும், பொருளுக்குமாகப் பிறருக்கு உபதேசம் பண்ணிக் கொண்டும் இரார்.

     ஆகவே, உண்மைக் குருவிலக்கணம் இதுவென அறிந்து, இந்தக் குருவை அடைய, முதலில் தயாவொழுக்கத்தொடு இருந்து சத்விசாரம் செய்தல் முறையாகும். அப்படிச் செய்து வந்தால், திருவருளால் ஞானக் கண் திறக்கும். உண்மைக் குருவைக் கண்டு அடையலாம். இக்குருவைத்தான் நம் திருவருட்பிரகாச வள்ளல் கண்டு கொண்டிருந்தார். இவர் எவரையும் நாடிச் செல்லவில்லை. மாறாகப் பலர் இவரை நாடி வந்து தத்தம் அனுபவங்களைக் கூறியும் உண்மையைத் தெரிந்து கொண்டும் சென்றனர்.
vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png