Srilanka Gnana Sabai Temple
21.8.2017 to 3.9.2017 இலங்கை மீசாலை வடக்கு..சத்திய ஞான கோட்டத்தில்..விழா நடைபெறல்.
     சோளிங்கர் நகரில் திரு விஜயன் தலைமையில் ஒரு சில அன்பர்கள் இந்த விழாவிற்கு வருகை தருகின்றனர். (அவர்கள் ஏற்கனவே 2010ல், அங்கு வருகை புரிந்தவர்கள்)

     திருச்சி திரு ஷண்முகம் அவர்களின் தலைமையில் 15 அன்பர்கள் இந்த விழாவிற்கு வருகை தருகின்றனர். (அவருடன் சுமார் 10 அன்பர்கள், 2010ல் அங்கு வருகை புரிந்தவர்கள்)

     மதுரையில்,முன்னாள் சன்மார்க்க சங்கக் காரியதரிசி திரு சுப்ரமணியம் தலைமையில் 8 அன்பர்கள், இந்த விழாவில் பங்கேற்க இலங்கை செல்லவுள்ளனர்.

    இலங்கை செல்வதற்கு, மதுரை, திருச்சி, சென்னை ஆகிய ஊர்களிலிருந்து, விமானப் போக்கு வரத்து உள்ளது. 

   பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், விமான டிக்கட் எடுத்து, நேரடியாக, கொழும்பு விமான நிலையம் செல்ல வேண்டும். அங்கிருந்து, கொழும்பு-யாழ்ப்பாணம் செல்லும் வேன்கள் மூலம், சாவகச்சேரியில், இந்த சத்திய ஞான கோட்டத்திற்கு வெகு அருகாமையிலேயே இறங்கிக் கொள்ள முடியும், நாள் சுருங்கச் சுருங்க, விமான டிக்கட் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, விருப்பப்படும் அன்பர்கள், தம்மிடமுள்ள பாஸ்போர்ட் சகிதம் டிக்கட் புக்கிங் செய்யலாம்.

    வாய்ப்புள்ள அன்பர்கள், இவ்விழாவில் பங்கேற்கும்படி, நிறுவனர் திரு கேதீஸ்வரன் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல் வேண்டுவோர்...தொடர்புக்கு...(91) 97898 72120.
20140115_074557-1.jpg

20140115_074557-1.jpg

20140117_063531.jpg

20140117_063531.jpg