இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில். விழா அழைப்பிதழில் குறிப்பிட்டபடி மதியம் 12.00 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர ஜெபத்துடன், இந்திய அன்பர்களின் தலைமையில், சுத்த சன்மார்க்க நிகழ்ச்சி, மாநாடு மிகச் சிறப்பாகத் துவங்கியது. இந்தியா, பாண்டிச்சேரியிலிருந்து திருமதி அன்னபூரணி, திரு அருட்பா கச்சேரி செய்வதற்கும், திருமதி மலர்விழி மங்கையர்க்கரசி, தியாகராஜர் கல்லூரி தமிழ்த் துறை (பொறுப்பு) தலைவர் அவர்களும், சொற்பொழிவாற்றச் சென்றுள்ளனர். பள்ளி மாணவ மாணவியரின் நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, இசைக் கச்சேரி முதலானவை, இன்று நடைபெறவுள்ளன. அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென்று, திரு கேதீஸ்வரன் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
image-0-02-06-ec8333a4169f6b769998199790a6923650d8e43cbcf3183d295b80e3db2fc428-V-2.jpg
IMG_20160721_200958.jpg
Write a comment