Srilanka Gnana Sabai Temple
2.9.2017 இலங்கை சாவகச்சேரி சத்திய ஞான கோட்டத்தில், மலேசியத் திருநாட்டின் சன்மார்க்க அன்பர்களுடன் மாநாடு நடைபெற்றது.
       இலங்கை சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், 2.9.2017 சனிக்கிழமை, விழா நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி, மலேசியாவிலிருந்து வருகை புரிந்த சன்மார்க்க அன்பர்களின் தலைமையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மட்டுவில் வித்தியாலய மாணவர்கள் கலை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சுத்த சன்மார்க்க வேண்டுகோள், திரு அருட்பாவிலிருந்து பாடல்கள் பாடிப் பரவப்பட்டன. வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி, மற்றும் திரு அருட்பா கச்சேரி ஆகியவை, வருகை புரிந்த அன்பர்கள் அனைவருக்கும் அருள் நலம் பயப்பதாக அமைந்தது.
059.JPG

059.JPG

20140114_080858.jpg

20140114_080858.jpg