Srilanka Gnana Sabai Temple
3.2.2018 இலங்கை யாழ்ப்பாணம் அருகே வட்டுக்கோட்டையில் அருட்பெருஞ்ஜோதி உதயம்.
   இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது வட்டுக் கோட்டை என்ற இடம். அந்த ஊரைச் சேர்ந்த திரு பொன்னம்பலம் மகன் கனகநாயகம் அவரது மனைவி திருமதி பிரேமாவதி ஆகிய இருவரும் கனடாவில் வசித்து வருகின்றனர். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் ஈர்க்கப்பட்ட் அவர்கள், வட்டுக்கோட்டையில், இன்று, 3.2.2018 (திங்கட் கிழமை) அதிகாலை 4.00 மணி அளவில், திரு அருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் மற்றும்  பல திரு அருட்பா பதிகங்கள் பாடி, அருட்பெருஞ்ஜோதியினை ஏற்றி வைத்து வழிபாடு செய்கின்றனர். இன்று  சாவகச்சேரி மீசாலை வடக்கில் சத்திய ஞான கோட்டம் கட்டிய திரு கேதீஸ்வரன் அவரது மனைவி திருமதி விஜயலக்‌ஷ்மி ஆகியோர் அதிகாலையில், 4.00 மணி அளவில் அங்கு சென்று, அவர்களுக்கு இப்பணியில் வழிகாட்டி, சொற்பொழிவாற்றவுள்ளனர்.  அதன் பின்னர் அன்னதானம் அங்கு நடைபெறும். இலங்கையில் அருட்பெருஞ்ஜோதி ஆலயங்கள் தோன்றுவது இது..மூன்றாவதாகும்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
20150119_184350.jpg

20150119_184350.jpg