கவிஞர். கங்கைமணிமாறன்
வள்ளலார் விழா...குத்தாலம் (நாகை) அருகில்
எம் திருவருட்பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டுவிழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிறன்று  நடைபெறவுள்ளது.
  அதற்கான அழைப்பிதழ் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. வழக்கம்போல் இவ்வாண்டு்ம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டிகள் வரும் ஆகஸ்டு  மாதமே நடத்தப்பட்டு பரிசுக்குரிய மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இம்மாத இறுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு உரிய முறையில் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்படும்.
   கடந்த ஆண்டைவிடவும் கூடுதல் சிறப்பை  இவ்வாண்டு எம்பெருமானார் ஏற்படுத்தித் தருவார் என்று உறுதியாக நம்புகிறேன்.வண்ணமயமான தலைப்புகளில் வள்ளல் பெருமானின் எண்ணங்களை எழிலுற வெளிப்படுத்தும் 
நிகழ்ச்சிகள் பற்றி அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.
   சன்மார்க்க அன்பர்களும் இலக்கிய நண்பர்களும் துணை நிற்கப்  பணிந்து வணங்கி விண்ணப்பித்துக் கொள்கிறேன்.