குறித்துரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின் கோணும் மனக்குரங்காலே நாணுகின்ற
உலகியலீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையைப் பொய் உரையாய் வேறு
எண்ணாதீர்
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய்பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டறிமின்
தெறித்திடுசிற்சபை நடத்தித் தெரிந்து துதித்டுமின் சித்தி எலா ம் இத்தினம் சத்தியம் சேர்ந்திடுமே
உலகியலீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையைப் பொய் உரையாய் வேறு
எண்ணாதீர்
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய்பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டறிமின்
தெறித்திடுசிற்சபை நடத்தித் தெரிந்து துதித்டுமின் சித்தி எலா ம் இத்தினம் சத்தியம் சேர்ந்திடுமே
2 Comments
Can you explain in detail
இதனைக் கேண்மின்;;;;;நான் சொல்லுவதைக் கேளுங்கள்.
கோணு மனக்குரங்காலே நாணுகின்ற உலகீர்;;;;நேர் வழி காட்டாமல் கோணலான வழியைக் காட்டும் குரங்கு மனத்தாலே இங்கே வந்து கேட்பதற்கே வெட்கப்படுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன்;;;;உங்களிடத்தில் இருந்து எந்த பயனும் நான் எதிர்பார்க்கவில்லை ஏன் எனில் உங்களிடம் எதுவும் இல்லை.
எனது மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர் ;;;;;என்னுடைய வார்த்தை உண்மையானது. நீங்கள் என்வார்த்தையைப் பொய்யாய் நினையாதீர்
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே ;;;ஏட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் மதம், சமயம் எல்லாம் உண்மையானது அல்ல. எல்லாம் பொய் பொய்தான்.
அவற்றில் புகுதாதீர்; ; அவைகளை நம்பி அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டாம்.
சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டறிமின்;;;எல்லாருக்கும் பொதுவாக விளங்கும் சிவம் ஒன்றுதான் நாமடையவேண்டிய பொருள் எனக் கண்டு அறிந்துகொள்ளுங்கள்.
செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்;;;;;; சிற்சபையாகியபுருவ மத்தியில் அடர்ந்து தெரியும் அசைவை தெரிந்து துதி செய்யுங்கள்.
சித்திஎலாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே;;;''எல்லாச் சித்திகளும் இத்தினமே உங்களை வந்து சேர்ந்திடும்.
இந்த விளக்கம் என்னுடைய அறிவிற்கு எட்டியது. '