SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்க விழாக்கள்
2.10.2017 திங்களன்று சென்னை ஆழ்வார் திருநகர் முபா அவர்கள் இல்லத்தில் வள்ளலாரின் பிறந்த தின விழா காலை ஏழு மணி தொடங்கி மாலை ஏழு மணிவரை நடைபெற்றது. காலை அகவல் பாராயணம். தொடர்ந்து வீதிஉலா. அடுத்து சன்மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு .பகல் பசியாற்றதலுக்குப் பின் இசை அரசி ரேடியோ டி வி. புகழ் திருமதி லலிதா ராமசுப்ரமணியம் அவர்கள் பக்க வாத்தியத்துடன் அருமையாக அருட்பா இசை விருந்து நடைபெற்றது. கொளப்பாக்கம் சந்தானம் அவர்கள்,256 வாரங்களுக்கு மேலாக k.k. நகர் விநாயகர் ஆலயத்தில் சன்மார்க்க  சொற்பொழிவு மட்டுமே நடத்திவரும் சன்மார்க்க செம்மல் ராமச்சந்திரன் அவர்கள்   .கா ஞ்சி சன்மார்க்க சங்க தலைவர் திரு கோடீஸ்வரன் அவர்கள், அயன்புரம் சன்மார்க்க அருணகிரி போன்றோர் ஆற்றிய சொற்பொழிவு மிக மிக அற்புதமாக  இருந்தது.
8.10.2017ஞாயிறு அன்று தேனாம்பேட்டை சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் விழா   மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை அகவல் பாராயணம், சன்மார்கக் கொடி ஏற்றுதல், சன்மார்க்க வித்தகர்கள் சொற்பொழிவு முடிவில் , அருட்பா  இசை முதலியன நடைபெற்றன.. காலை, பகல் இரவு மூன்று வேளைகளிலும் அன்னதானம் நடைபெற்றது.நூறு ஏழைகளுக்கு புடைவையும் அதேபோல் ஆண்களுக்கு வேஷடி,டவல் இலவசமாக வழங்கப்பட்  டது. மனநிலை  குன்றிய   குழந்தைகளை வைத்து     பராமரித்து வரும் சமர்ப்பனா நிறுவனத்திற்கு குழந்தைகளின் உடைக்காக பத்தாயிரம் ரூபாயும் ஆங்குள்ள முதியோர்கள் இருபது
பேருக்கு புடைவையும்  இரண்டு ஆண்களுக்கு வேஷ்டி  டவலும் வழங்கப்பட்டது.  இறை வழிபாட்டோடு 
இரண்டு இடங்களிலும் மக்களுக்குப் பிரசாதம்  வழங்கப்பட்டது.