புறத்தே தோன்றாத இறைவனை நம்முள்ளே எப்படிக் காண்பது?
தவம் செய்தால் மட்டுமே இறைவனைக் காணமுடியும்.
1 தவம் என்பது மனதை எந்தவித செயல்பாடும் இல்லாமல் நிறுத்துவதே.. ஏன் என்றால் எங்கே மனம் செயல்படுகின்றதோ அங்கே இறை அனுபவம் தோன்றாது
உரை மனங்கடந்த ஒரு பெரு வெளி மேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்சோதி.
{அகவல் வரி 12 )15
தவ அனுபவம்
வள்ளலார்போல் தவ அனுபவத்தை வரிசைப் படுத்தி வேறு யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.
1 முதலில் தக்க ஆசானைக் கொண்டு நமது நெற்றிக்
கண்ணைத் திறந்து கொள்ளவேண்டும்
௨. மனதை அங்கே நிறுத்தினால் நாதம் கேட்கும்.
3 பிறகு பர நாத நிலைக்குப் போகவேண்டும்.
4 அந்த அனுபவத்தில் அண்ட பகிரண்டம் தோற்றறியாப் பெருஞ்சோதி தோன்றும்.
5 அங்கே மதி மண்டலத் தமுதம் சுரக்கும்.
6 பெருஞ்சோதி யின் மத்தியிலே பொன்னொளி தோன்றும்
7 பொன்னொளி நடுவே உள்ளொளி காணலாம்
.அந்த உள்ளொளியே கடவுள்.
ஈற்றறியேன் இருந்து இருந்து இங்கு அதிசயிப்பது என் நீ
என்கின்றாய் நீ எனை விட்டேகுதோறும் நான்தான்
காற்றறியாத் தீபம்போல் இருந்திடும் அத்தருணம்
கண்ட பரிசு என்புகல்வேன் அண்ட பகிரண்டம்
தோற்றறியாப் பெரும் ஜோதிமலை பர நாதத்தே தோன்றியது
ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அதுதான்
மாற்றறியாப் பொன் ஒளியோ அவ் வொளிக்குள் ஆடும்
வள்ளலா அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே.
. (பாடல் 2498) 16
முச்சுடராக இறைவன் அனுபவமாவதை மேலே கண்டோம்.
இதையே கீர்த்தனைப் பகுதியில் ஜோதியுட் ஜோதியுட் ஜோதி என்று பாடியுள்ளார்.
மனிதனுக்குள் தவத்தில் ஏற்படும் அனுபவங்களை இவ்வாறு யாரும் விளக்கம் தரவில்லை. என இப்பாடல் மூலம் அறியமுடிகிறது
தவ அனுபவ வரிசையைஅவருடைய அகவலில் காண்போம்.
அறிபவை எல்லாம் அறிவித்து என்னுள்ளே
பிறிவற விளங்கும் பெரிய சற்குருவே (தீட்சை பெறுதல்)
கேட்பவை எல்லாம் கேட்பித்து எனுள்ளே
வேட்கையின் விளங்கு சற்குருவே (நாதம் கேட்டல்)
காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே
மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே (ஒளி காணல்)
செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே
உய்பவை அளித்து எனுள் விளங்கு சற்குருவே (தேக சித்தி)
உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே (அமுதம் உண்ணல்
சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து ஏகாக் கரப்
பொருள் ஈந்த சற்குருவே .(மரணமிலாப் பெருவாழ்வு)17
அறிபவை................குருவை அணுகி தீட்சை பெற்று
தவம் ஆரம்பிப்பது
கேட்பவை..................நாத அனுபவம்
காண்பவை................உள்ளே ஒளி காண்பது
உண்பவை.................அமுதம் உண்பது.
அமுதம் உண்டால் மரணம் வராது. இதுவே
சாகாக் கலை.
அம்மையைக் கண்டேன் அவள் அருள் கொண்டேன்
அமுதமும் உண்டேனடி -அம்மா
அமுதமும் உண்டேனடி.
தாங்கும் அவள் அருளாலே நடராஜர்
சந்நிதி கண்டேனடி --அம்மா
சந்நிதி கண்டேனடி. (பாடல் எண்கள் 2208 ,2209 )18
இந்த அனுபவ வரிசையை யாரும் தரவில்லை ,
ஆன்மாவை அக உறுப்பாக ஆக்கு
மனித உடம்பின் உள்ளே இருதயம்,நுரை ஈரல் சிறுகுடல், பெருங்குடல் போன்றவை உறுப்புகளாக இருப்பதால் உடம்பு அழியும்போது அவைகளும் அழிந்துவிடுகின்றன.ஆன்மா உடம்பின் உள்ளே இருந்தாலும் அது தனியாகவே இருப்பதால் அது உடம்பைவிட்டு வெளியேறி மரணத்தை விளைவிக்கின்றது. மரணத்தைவெல்ல வேண்டுமானால் ஆன்மா உடம்பைவிட்டு வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.ஆன்மாவை இருதயம், நுரை ஈரல் போன்ற உள் உறுப்புகள் போல் ஆன்மாவையும் உள் உறுப்பாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளலார்.புருவ மத் தியாகிய சபையைக்கொண்டு அவ்வாறு செய்யலாம் என்கிறார்.
அகப்பூ அக உறுப்பாக்க அதற்கு அவை அகத்தே வகுத்த அருட்பெருஞ்சோதி.(அகவல்)19
இது ஒரு புதிய கருத்து என எண்ணவேண்டாம். மகா பாரதத்திலே பீமனும் துரியனும் சண்டைபோடும்போது பீமன் துரியோதனனை உன் உயிர் எங்கே இருக்கிறது என்று கேட்க அவன் தன் மார்பைக் காட்டுகின்றான் .பீமன் அங்கே அடிக்க துரியனுக்கு ஒன்றும் ஆகவில்லை. துரியன் பீமனை உன் உயிர் எங்கே உள்ளது என்று கேட்க பீமன் தனது தோளைக் காட்டுகின்றான். துரியோதனன் அங்கே அடிக்க பீமன் சாய்ந்து விடுகிறான் .கண்ணன் பீமனை எழுப்பித் தனது தொடையைத் தட்டிக் காட்டுகிறார். பீமன் குறிப்பறிந்து துரியனின் தொடை மேல் அடித்து அவனை வீழ்த்துகிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது. குருகுல வாசத்தில் பயின்றதால் அவர்கள் தங்கள் உயிர் எங்கே இருக்கிறது என்று அறிந்து அதைத் தங்கள் விருப்பம்போல் உடம்பில் எங்கே வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளும் வித்தை அவர்கள் பயின்றிருந்தார்கள் ,அந்த ஞானப் படிப்பெல்லாம் இப்போது போய்விட்டதால் நமக்கு வள்ளலார் கூறுவதெல்லாம் புதுமையாக உள்ளது.
மரணமிலாப் பெருவாழ்வு அடைவதற்கு ஒருசாதனம் உயிர் எங்கே இருக்கிறது என்று அறிந்து அதனை உள் உறுப்பாக மாற்றிக்கொள்ளும் சாதனையே ஆகும்.
பிண்டத்தில் உயிர் எப்படிப் பொருந்துகின்றது, அது எப்படிப் பிரிகின்றது அது பிரியாமல் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்றெல்லாம் இறைவனே வள்ளலாருக்குத் தெரியப்படுத்தினானாம்.
.பிண்டத்திலிருந்து உயிர் பிரியா வகையை இறைவன் தனக்குத் தெரிவித்ததாக வள்ளலார் கூறுகிறார்.அந்த வகையை நமக்கும் வள்ளலார் விளக்குகின்றார்.
அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே
ஆசைப் பட்டது அறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டியே
பிண்டத்துயிர்கள் பொருந்தும் வகையும் பிண்டந்தன்னையே
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே 20
பாடல் எண்1781 )
ஆன்மாவை அக உறுப்பாக ஆக்கவேண்டும் என்று இதுவரை வேறு யாரும் சொல்லி மரணமிலாப் பெருவாழ்விற்கு வழி காட்டவில்லை..
'அண்டப் பரப்பின்' என்ற பாடலினை மேற்காட்டியுள்ளது அற்புதம்.
படித்தீர்களே நன்றி ஐயா.
Always think and keep chant Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi along with grace and love of attitude towards other lives combined chanting your Guru's name it will lead to fixing the live automatically firm inside you.On sufficient maturity one day the total your being becomes changed as an ever living being you become deathless immortal.