திரு அருட்ப்ரகாச வள்ளல் பெருமானாரின் பிறந்த தின விழாவும் ஆழ்வார் திருநகர் சன்மார்க்க சங்கத்தின் 4 6 ம் ஆண்டு விழாவும் வருகிற செவ்வாய்க் கிழமை அக்டோபர் இரண்டாம் நாள் 9 8 நேரு தெரு ஆழ்வார் திருநகர் சங்கத்தில் காலை ஏழு மணி தொடங்கி மாலை ஆறு மணி வரை நடைபெறும். அவ்வமயம் சன்மார்க்க ஆன்றோர்கள் பலர் வள்ளலாரின் கருத்துக்களை வாரி வழங்க உள்ளனர்.திரு அருட்பா இசையும் நடைபெற உள்ளது. இதைக் கண்ணுறும் அன்பர்கள் இதையே நான் நேரில் அழைத்ததாக ஏற்று வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.வந்தனம் அன்புடன் மு பா.
Write a comment