SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
1 1. ஆபத்தை நீக்கி வளர்த்தே

.ஒருமுறை மாத பூசத்தின் போது வன்னியர் போராட்டம் சாலை மறியல் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் ஆக ஏழு பேர் பூசத்தை முன்னிட்டு வடலூர் கிளம்பினோம்.வாணியம்பாளயம் சென்றபோது பேருந்தின்மீது கல் எறிந்தார்கள்.பேருந்துவின் முன் கண்ணாடி உடைந்து போகவே பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. அருகிலிருந்த ரயில் நிலையம் சென்றோம். ஒரு ரயில் இப்போது வரும் ஆனால் அது இங்கே நிற்காது என்று சொல்லிவிட்டார்கள். வடலூர் போகவேண்டுமே என்று வள்ளலாரை வேண்டினோம். வந்த ரயில் எதிர்பாராதவிதமாக நின்றது . நாங்களும் ஏறிக்கொண்டோம். பண்ருட்டியில் இறங்கிவிட்டோம். அங்கிருந்து வடலூர் செல்ல வண்டி ஏதும் இல்லை. சைக்கிள் வண்டியில் போகலாம் என்று வாடகை சைக்கிள் கேட்டோம். ஒரு கடையில் தர மறுத்துவிட்டார்கள். மற்றொரு கடையில் நாங்கள் தவறாமல் வடலூர் போகிறோம் என்று சொன்னதும் நீங்களே போகிறீர்கள் வண்டி போனால் என்ன எடுத்துச் செல்லுங்கள் என்று சைக்கிள் தந்தார்கள். நாங்களும் சைக்கிளில் வடலூர் கிளம்பினோம். சிறிது தூரம் வந்ததும் இரண்டு பேர் இரண்டு சைக்கிளில் வந்தார்கள். எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்.எங்களில் ஒருவர் முன்னே செல்லுகிறோம்.மற்றவர் உங்கள் பின்னே வருவார்.அஞ்சவேண்டாம் என்றார்கள். அதேபோல் ஒருவர் எங்களுக்கு முன்னே சென்றார். வழியில் குறுக்கே கட்டியிருந்த தொலைபேசிக் கம்பிகளைத் தூக்கிவிட்டு நாங்கள் அதைக் கடந்ததும் கம்பியை விட்டுவிட்டு எங்களுக்கு முன்னே வந்துவிடுவார். அப்படியே போய்க் கொண்டிருந்தோம். கொஞ்ச நேர த்தில் முந்திரிக் காட்டுக்குள்ளே இருந்து சுமார் பத்து பேர் கைகளில் கம்பும்,கத்தியும் கொண்டு இதோ வருகிறார்கள் பார் விடாதே என்று கத்திக் கொண்டே எங்களை நோக்கி வந்தார்கள். நாங்கள் நடுங்கிப்போனோம்.ஆனால் முன்னே சென்றவர் அவர்களை நோக்கி இவர்கள் நம்மவர்கள் தாம் என்றார்.உடனே அவர்கள் பின் சென்றுவிட்டனர். அதேபோல் மீண்டும் காடாம்புலியூர் அருகே சுமார் பத்து பேர் கழிகளு டன் வந்தார்கள். முன்னே சென்றவர் நம்ம ஆட்கள் தான் என்றவுடன் அவர்களும் எங்களைத் தாக்காமல் தோப்புக்குள்ளே சென்றுவிட்டார்கள். நெய்வேலி வளைவு வந்தவுடன் எங்களுக்குக் காவலாக வந்த இருவரும் இனி பயமில்லாமல் நீங்கள் செல்லலாம் என்று கூறி நெய்வேலி வழியாக சென்றுவிட்டார்கள். வழியில் உள்ள மரங்கள் எல்லாம் எரிக்கப்பட்டதால் ஜோதி தரிசனம் காண வடலூர் மக்கள் கூட வரவில்லை. அன்று ஜோதி பார்த்தது நாங்கள் ஏழு பேர் மட்டும்தான். இரண்டு பேர் சைக்கிளில் எங்களுக்குக் காவலாக யார் வரச்சொன்னது. ஏன் வரவேண்டும். வந்தவர் எங்களை நம்ம ஆட்கள் என்றாரே ஏன்?
எங்களுக்கு எந்த ஆபத்தும் வராத வகையில் காத்தது வள்ளலார் தவிர வேறு யார்?