திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய மனுமுறைகண்ட வாசகம்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
சென்னை சாஸ்திர விளக்கச் சங்கத்தார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வள்ளலாரால் வரையப்பட்டது ஒரு வரலாற்றுக்கதை. மகனை முறை செய்த ஒரு மன்னவனின் கதை அது. பெரியபுராணத்தில் வரும் மனுச்சோழர் வரலாற்றை விரித்து உரைநடை நூலாய்க் கொடுத்திருக்கிறார் நமது பெருமானார். அதற்கு 'மனுமுறை கண்ட வாசகம்' எனப் பெயரிட்டார். கருணையே வடிவான கடவுள் எழுதியதனால் வரிக்கு வரி காருண்யம் பிறக்கிறது. கருணை இல்லாதவர் நெஞ்சிலும் காருண்யத்தை விளைக்கிறது. இங்கு ஒரு வரலாற்றுக் கதைவடிவில் ஜீவகாருண்ய ஒழுக்கம் விளக்கப்பட்டுள்ளது.
உரைநடையில் மடை திறந்து, உயிர்இரக்கத்தைக் கடை விரிக்கிறது இக்கதை. ஆழ்மனத்தின் அடிதொட்டு கருணையைத் தேர்விட்டு அழைத்து வருகிறது. 1854 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட இந்நூல் வள்ளலாரால் எழுதப்பட்டு அவர் காலத்திலேயே அச்சிடப்பட்ட முதல் உரைநடை நூல்.
இத்தகைய சிறப்புமிக்க நூலினைக் கேட்பொலியாக வெளிவர உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.
அன்புடன்
சிவகுரு
Great effort