அருள்பாவலர் சக்திவேல் .வே
மன்னார்குடியில்..வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாள் விழா..

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

பேரன்புடையீர் அருள் வணக்கங்கள்...!

திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி சன்மார்க அன்பர்கள் ஒன்றிணைந்து , திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனாரின் வருவிக்கவுற்ற திருநாள் விழாவைக் கொண்டாட உள்ளனர்.

இவ்விழாவானது வள்ளல் பெருமனார் வருவிக்கவற்ற புராட்டாசி மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிய நன்னாளில்... 22- 09-2017 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெறவுள்ளது.

மன்னார்குடி , TVR சாலை , ஐவர் சமாது , அ/மி சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி திருக்கோயில் வளாகத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் 22-9-2017 மாலை 4 ,00 மணியளவில் திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணக் கூட்டுவழிபாடும் ; அருட்பா வாசிப்பும் ; சத்விசாரமும் ;

இரவு 7.00 மணியளவில் ஜோதி வழிபாடும் அன்னதானமும் நடைபெறும்.

வள்ளல் பெருமனார் பிறந்த நட்சத்திர நாளில் ... அனைவரும் வருக! அருள்பாக்களை பகிர்க! அருள் அனுபவம் பெறுக!