அருள்பாவலர் சக்திவேல் .வே
வடலூர் அருள்ஜோதி காண வாரீர்...! வாரீர்..! 🙏
வாடிய பயிரைக் கண்டு வாடிய..
வள்ளல் பெருமனார் ஏற்றிய...
வடலூர் ஜோதி காண வாரீர்..

கண்மூடி வழக்கமெல்லாம்...
மண்மூடிப் போக பண் பாடிய...
அருள் ஜோதி காண வாரீர்..!

தர்மச்சாலை அணையா அடுப்பால்..
ஏழைகளின் பசியை அணைக்கும்...
கருணை வள்ளலைக் காண வாரீர்..!

சாதி சமய மத பேதம் நீக்கி ...
ஆதி நீதியை நிலைநாட்டும்..
ஜோதியைக் காண வாரீர்..!

வெள்ளொளியை வெளியே கண்டு
உள்ளொளியை உணர ...
வள்ளல் ஜோதி காண வாரீர்...!

ஜீவகாரண்யமே மோட்ச வீட்டின்...
திறவென திறம்பட உரைத்த...
வள்ளல் ஜோதி காண வாரீர்..!

சூரிய சந்திர அக்னியோடு...
பெரிய ஜோதியாய்த் திகழும் ...
வள்ளல் ஜோதி காண வாரீர்..!

அண்டத்திலுள்ள பேரொளியை...
பிண்டத்திலே பேரொளியாய்க் காண..
அருள் வள்ளல் ஜோதி காண வாரீர்...!

ஏழுதிரை நீக்கி ஜோதி கண்டு
ஏழெழு பிறவியும் எழாமல் போக..
அருள் ஜோதி காண வாரீர்..!

அண்டத்திலுள்ள சூரியனைப்போல...
பிண்டத்திலே கோடி சூரிய ஒளியாய்..
தைப்பூச ஜோதி காண வாரீர்..!

வரங்களெல்லாம் பெறவே...
வடலூர் வடதிசைக்கே வாரீர்...
அருள் வள்ளல் ஜோதி காண வாரீர்...!
🙏🙏🙏🔥🙏🙏🙏
http://www.vallalargnananeri.com/2019/01/blog-post_14.html