priya kumara
வள்ளலார் அமைத்த ஞான சபை - பாதாள அறை
நான் ஒரு ஆராய்ச்சி மாணவி. இந்த தகவலை புத்தகத்தில் படித்தேன். இதில் கூறி இருக்கும் அனைத்தும் உண்மையா ?தயவு செய்து தெரிவிக்கவும்
வள்ளலார் அமைத்த ஞான சபை - 16 அடி சுற்றுவட்டத்தில் ஒரு பாதாள அறையும் , அதன் மேற்புறத்தில் ஒரு மேடையும் , அதன் மேல் பகுதியில் கல் தூண் போன்ற ஒரு கம்பமும் , அதில் பிறை போன்ற ஒரு அமைப்பும் அந்த பிறை மேல ஒரு அகல் விளக்கின் உருவமும் , அதில் எண்ணெய் ஊற்றி திரி போட்ட விளக்கும் , அதற்கு முன்னால் ரசம் பூசிய கண்ணாடியும் , நான்கு புறத்திலும், இரத்தின கம்பளங்கள் விரிக்கப்பட்டு , நான்கு புறத்திலும் ஏழு வண்ணங்கள் கொண்ட திரைகள் தொங்கவிடப்பட்டுள்ளன
Anandha Barathi
வாரியார் சுவாமிகள் இது குறித்து விரிவாக தனது வாழ்க்கை வரலாற்றி எழுதி உள்ளார்கள். அந்த நூலில் ஞானசபை திருப்பணி என்னும் பகுதியை காண்க.

விளக்கு, ஏழு திரைகள் ஆகியவற்றை இன்றும் நாம் காணலாம். மற்றைய செய்திகளுக்கு வாரியாரின் நூலில் உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.

நன்றி
Tuesday, May 21, 2019 at 09:34 am by Anandha Barathi