Vallalar Universal Mission Trust   ramnad......
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
தாயினும் இனிய உன்றன் தண்ணருட் பெருமை தன்னை
நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.