சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது -
அது மயங்கவே
அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே
பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது -
அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன -
மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது -
சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது -
பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன -
வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன -
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது -
காது கும்மென்று செவிடுபடுகின்றது -
நா உலர்ந்து வறளுகின்றது -
நாசி குழைந்து அழல்கின்றது -
தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது -
கை கால் சோர்ந்து துவளுகின்றன -
வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது -
பற்கள் தளருகின்றன -
மலசலவழி வெதும்புகின்றது
-
மேனி கருகுகின்றது -
ரோமம் வெறிக்கின்றது -
நரம்புகள் குழைந்து நைகின்றன -
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன -
எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன -
இருதயம் வேகின்றது -
மூளை சுருங்குகின்றது -
சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது -
ஈரல் கரைகின்றது -
இரத்தமும் சலமும் சுவறுகின்றன -
மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது -
வயிறு பகீரென்றெரிகின்றது -
தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன -
உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.
அது மயங்கவே
அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது - அது சோரவே
பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது -
அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன -
மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி கெடுகின்றது -
சித்தம் கலங்குகின்றது - அகங்காரம் அழிகின்றது -
பிராணன் சுழல்கின்றது - பூதங்களெல்லாம் புழுங்குகின்றன -
வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன -
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது -
காது கும்மென்று செவிடுபடுகின்றது -
நா உலர்ந்து வறளுகின்றது -
நாசி குழைந்து அழல்கின்றது -
தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது -
கை கால் சோர்ந்து துவளுகின்றன -
வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது -
பற்கள் தளருகின்றன -
மலசலவழி வெதும்புகின்றது
-
மேனி கருகுகின்றது -
ரோமம் வெறிக்கின்றது -
நரம்புகள் குழைந்து நைகின்றன -
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன -
எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன -
இருதயம் வேகின்றது -
மூளை சுருங்குகின்றது -
சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது -
ஈரல் கரைகின்றது -
இரத்தமும் சலமும் சுவறுகின்றன -
மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது -
வயிறு பகீரென்றெரிகின்றது -
தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன -
உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.
Write a comment