# கருணை ஒன்றையே சாதனமாக கொள்ளப்படவேண்டும்.
# கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும் வைப்பது.
# ஆண்டவரிடத்தில் அன்பு என்பது ஆண்டவரின் உண்மை அறிதலே.
# ஆண்டவரின் உண்மையறிதலுக்கு உள்ள ஒரே வழி ஜீவகாருண்யம் ஆகும்.
# ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில் 'கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே ஆகும்.
சுத்த சன்மார்க்கத்தில் கற்கும் கல்வி யாதெனில்...
# ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதல்
# கருணையை மட்டுமே சாதனமாகக் கொள்ளுதல்
# ஆசாரங்களை விட்டொழித்து பொதுநோக்கம் வருவித்துக் கொள்ளுதல்
# நல்ல விசாரணை செய்தல்
ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்கமுடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த வசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றாதிலும் தெய்வத்தை நினைகின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் - வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய், நூறு, ஆயிரம் முதலிய வருச காலம் தவஞ்செய்து, இவ்உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள்.
இப்படி தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும், இதை விடக் கோடிப்பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக்கொள்ளலாம். v a l l a l a r.....