DAEIOU - தயவு
3.11.2019 கோயம்புத்தூர் கோயில்பாளையத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சிகள்.
இது என்ன சன்மார்க்க விழாவா, ஜீவகாருண்ய விழாவா என்று வியக்கும் வண்ணம், கடந்த 3.11.2019 அன்று, கோயம்புத்தூர் கோயில்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸின் நிறுவனர் திரு ராம்தாஸ் அவர்கள் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, சுத்த சன்மார்க்க நெறி அனைத்து மட்டங்களிலும் பரவும் வண்ணம் நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள், திரளாக வந்து மேற்படி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதல் நாளான 2.11.2019 அன்று முதலே, பல அன்பர்கள் வந்து அங்கு தங்கி சத் விசாரம் செய்தனர். 
 
திரு அருட்பா இசைக் கச்சேரி
பட்டி மன்றம்
வினாடி வினா
சொற்பொழிவு
ஊழியர்களின் குழந்தைகள் பங்கேற்ற மாறு வேடக் காட்சி.
யோகா மாஸ்டரின் பேச்சு.
நான் எவ்வாறு சன்மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டேன் என்பது உள்ளிட்ட பல் நிகழ்ச்சிகள் அவர் அங்கு நடத்தி சுற்றிலுமுள்ள பகுதி மக்கள் அனைவரும் சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபடும் அளவிற்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்.

2.11.2019 இரவிலிருந்தே 3.11.2019 அன்று தேதியில் நிகழ்ச்சிகள் முடியும் வரையில், அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. வளர்க அவரது சன்மார்க்கத் தொண்டு..பாராட்டுவோம்.
vlcsnap-2018-04-03-15h27m18s775.jpg

vlcsnap-2018-04-03-15h27m18s775.jpg

vlcsnap-2018-04-03-13h21m08s023.png

vlcsnap-2018-04-03-13h21m08s023.png