இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட திரு (பொன்னம்பலம்) கனகநாயகம் மற்றும் அவரது மனைவி பிரேமாவதி ஆகியோர் கனடாவில் வசித்து வருகின்றனர். இலங்கை வரும்போதெல்லாம், மீசாலை வடக்கில் திரு கேதீஸ்வரன் அமைத்துள்ள சத்திய ஞான கோட்டத்திற்கு வரும் வழக்கத்தைக் கைக்கொண்டனர். வர வர அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அவர்களுக்கு ஆர்வம் மிகுதியாயிற்று, தமது சொந்த ஊரான வட்டுக்கோட்டையில் அருட்பெருஞ்ஜோதியினை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டுமென, திரு கேதீஸ்வரனிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். 3.2.2019 (ஞாயிறு அன்று) திரு கேதீஸ்வரன், தனது குடும்பத்தாருடன், அங்கு சென்று, காலை 4.00 மணி முதலே அருட்பெருஞ்ஜோதி அகவல், அட்டகம், திருவடிப் புகழ்ச்சி இன்னும் பல திரு அருட்பா பாடல்களைப் பாடி, அருட்பெருஞ்ஜோதியினை ஏற்றி வைத்தார். அதன் பின்னர், அவ் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
IMG-53827233fdcbaed8119beafb0a78f3e6-V.jpg
IMG-88e87c0268dd581944f7ab72cd65b53e-V.jpg
IMG-c0bb50efeb5aec25d26932b7381fbfb3-V.jpg
IMG-c1fe461bf0f12612efa4790f73c83f37-V.jpg
Write a comment