7. அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை
26 - 10 - 1870
உ
திருச்சிற்றம்பலம்
அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடனறிவிப்பது. ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பியிருங்கள் என்னா லுங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னுங் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன். அஞ்சவேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள்.
திருச்சிற்றம்பலம்
* * *
Write a comment