Thiru Arutprakasa Vallalar- Tamil
17. சித்திவளாக வழிபாட்டு விதி - 1873
17. சித்திவளாக வழிபாட்டு விதி 1873

சுவாமிகள் ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து,

"இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்தக் கதவைச் சாத்தி விடப் போகிறேன். இனி கொஞ்சகாலம் எல்லோரும் - ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் - உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், 'நினைந்து நினைந்து' என்னும் தொடக்கமுடைய - 28 பாசுர மடங்கிய - பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பி லிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்."

என்று திருவாய்மலர்ந் தருளினார்கள்.* * *