வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் சுத்த சன்மார்க்கர்கள் அறங்காவலர்களாக வரவேண்டும் என்பன போன்ற முக்கிய விதிகள் நிறைவேற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்வாராக. இதற்கான முயற்சியில் இருக்கும் அனைவருகும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். முக்கியமாக ஏ.பி.ஜெ.அருள் அவர்களுக்கு இவ்வழக்கில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
எனினும் நாம் தற்போது இருக்கும் நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வதைவிட நிர்வாகத்தையே மாற்ற போராடவேண்டும். அதாவது இந்து நலத்துறையிடமிருந்து (அரசிடமிருந்து) முற்றிலுமாக வள்ளலார் தெய்வ நிலையத்தை மீட்டு அதனை சுத்த சன்மார்க்கிகளே நிர்வாகம் செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அதன்பின் நாம் வழக்கிட்டு மீட்க ஆவண செய்தல் வேண்டும். உதாரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து நலத்துறையிடமிருந்து (அரசிடமிருந்து) மீட்டு தீட்சதர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் நடத்துவதைப் போன்று நாமும் இதனை மீட்க வேண்டும். ஒரு மத சார்பற்ற நிலையத்தை, மதம் சார்ந்த ஒரு அரசுத்துறை நிர்வாகம் செய்வது வள்ளலார் கொள்கைக்கே இழிவை ஏற்படுத்திவருவதை சுத்த சன்மார்க்கிகள் உணர்ந்து விழித்தெழ வேண்டும்.
Friday, October 2, 2015 at 09:02 amby TMR RAMALINGAM
எனினும் நாம் தற்போது இருக்கும் நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்வதைவிட நிர்வாகத்தையே மாற்ற போராடவேண்டும். அதாவது இந்து நலத்துறையிடமிருந்து (அரசிடமிருந்து) முற்றிலுமாக வள்ளலார் தெய்வ நிலையத்தை மீட்டு அதனை சுத்த சன்மார்க்கிகளே நிர்வாகம் செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அதன்பின் நாம் வழக்கிட்டு மீட்க ஆவண செய்தல் வேண்டும். உதாரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து நலத்துறையிடமிருந்து (அரசிடமிருந்து) மீட்டு தீட்சதர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் நடத்துவதைப் போன்று நாமும் இதனை மீட்க வேண்டும். ஒரு மத சார்பற்ற நிலையத்தை, மதம் சார்ந்த ஒரு அரசுத்துறை நிர்வாகம் செய்வது வள்ளலார் கொள்கைக்கே இழிவை ஏற்படுத்திவருவதை சுத்த சன்மார்க்கிகள் உணர்ந்து விழித்தெழ வேண்டும்.