www.vallalarspace.com/durai
கறையெலாம் நீங்கிக்கொடுங் பிறவிக்கடல்கடந்த பேரின்பமே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

என்பும் பிறர்க்குஎன அருள்வழி வாழ்கின்ற
அன்பறிவு ஒழுக்கம் உடையீர் வணக்கம்பல
நலமொடு நற்செல்வங்கள் எலாம்மிகும் நல்வாழ்வில்
வளமொடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்கவே!

மறையெலாம் வாய்மையில்ஏற்றும் நம்வள்ளல் வந்தருள்வார்
குறையுள்ள எம்போன்ற நம்மவர்களின் அனைத்துக்குற்றமும்
குறைகளும் தகர்ந்துகடந்தே நலம்பெறு இணக்கம்பெறுவோம்
நிறைவான நல்லருள் நம்முள்ளேநிரம்பியே நிலைபெறுவோம்
பொறையும் நற்செறிவும் நன்நிறைஅறிவும் அருள்அனுபவமும்
இறையும் இனிஎன்றும் இறவாமெய்நிலையும் பொருந்திடுவோம்
நிறைமொழியோன் புகலருள் மொழிகொண்டே அறைகின்றேன்
கறையெலாம் நீங்கிக்கொடுங் பிறவிக்கடல்கடந்த பேரின்பமே!


எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நேயமுடன்,
துரை சாத்தணன்