www.vallalarspace.com/durai
திருநீறு திருமுகத் திருப்பயன் பெருகுகவே!
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

திருநீறு தரித்தாலும் சுத்த சன்மார்க்கம் குன்றாது
திருநீறு விடுத்தாலும் சுத்த சன்மார்க்கம் கூடாது
திருநீறு தரித்தலும் மறுத்தலும் புறப்புறமே அறிக
திருநீறு தருக்கத்தால் திறக்குமோ திருச்சபையும்!


திருநீறு தரித்தும் தெருளிலே அசைவாருண்டு!
திருநீறு தரியாதும் தெருளிலே அசைவருண்டு!
திருநீறு தரித்தும் தெருள்சபை அமர்வாருண்டு!
திருநீறு தரியாதும் தெருள்சபை அமர்வருண்டு!


திருநீறு வேண்டுவோர் தரித்திடுக வாழவே!
திருநீறு வேண்டாதார் விடுத்திடுக வாழவே!
திருநீறு புறப்புறம் அகத்தாரைப் பிரிக்குமோ?
திருநீறு அகத்தகம் அறிந்தாக்கால் திருநீயே!


திருநீறு திருமேனித் திருமண் திருமந்திரம்
திருநீறு திருமலர்த் திருக்கண் திருவாசகம்
திருநீறு திருவடித் திருவமுது திருஅருட்பா
திருநீறு திருமுகத் திருப்பயன் பெருகுகவே!


நன்றி! வணக்கம்! வளமோடுவாழ்க!!

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்க!
வள்ளல்மலரடிவாழ்க! வாழ்கவே!
திருச்சிற்றம்பலம்

உங்கள்அன்பன்
துரை

 

velayuda mudaliyar[1].jpg

velayuda mudaliyar[1].jpg

16 Comments
narayani julu
அன்புள்ளம் கொண்ட சகோதரர்கள் சகோதரிகளே! நம் வள்ளற்பெருமான் கைப்பட எழுதிய முதல் விண்ணப்பத்தில் சத்திய வாசகங்கள்; ‘” எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம் ! --” சிதம்பரம் இராமலிங்கம்.
வள்ளற்பெருமான் கட்டளை மட்டுமே நம் கட்டளை. நன்றி.
Saturday, April 2, 2016 at 15:19 pm by narayani julu
sivadurai sivamayam
sorry sir, it is totally wrong sir. I have strong faith with my Religion Saivam and the wearing thiruneeru is habit and symbol of only Saiva Marga. Your great saint was in the Saiva Religion then he changed his way and went out from Saiva Religion. He advised his members do not believe saiva philosophy. I ask you How it is right, wearing thiruneeru is your symbol?. once you went out, you cannot claim my religion symbol. Is it right? I respect your saint, but i believe my Gods and follow my customs. If you say wearing thiruneeru is correct don’t say don’t believe Saiva Philosophy. please don’t make this.
Saturday, April 2, 2016 at 15:56 pm by sivadurai sivamayam
Damodaran Raman
வள்ளலார் அன்பர்களே,ஒவ்வொருவரும் தரும் விளக்கங்கள் பூசல்களைத் தீர்க்குமாறு இல்லை.வள்ளலார் விபூதியைப் பூசுவதை விட்டு விட்டார் என்று தாங்களாகவே கருதிக் கொண்டு எழுதியும் பேசியும் வருகின்றனரே அல்லாமல் உறுதியான சான்று கூறி மெய்ப்படுத்தும் செயல்களைச் செய்வதில்லை.ச.மு.கந்தசாமிப் பிள்ளை அவர்கள்தான் வள்ளலார் வரலாற்றைக் கீர்த்தனையாகப் பாடியவர்.வள்ளலாரை நேரில் சித்தி வளாகத்தில் கண்டவர்.வள்ளலார் ஆணைப்படி வள்ளலார் மேல் பிரபந்தம் பாடியவர்.இவர் ஒன்றும் வள்ளலார் விபூதி பூசுவதை விட்டு விட்டார் என்று கூறிய தில்லை.மாறாகக் கந்தசாமிப் பிள்ளையவர்கள் இறுதி வரை விபூதி பூசியவராய்த்தான் திகழ்ந்தார்.தொழுவூர் வேலாயுதனாரும் வள்ளலார் விபூதி பூசுவதை விட்டு விட்டார் என்று அறிவித்த தில்லை.இதுதான் உண்மை நிலை.வள்ளலார் விபூதியைப் போற்றினார். விபூதியால் வியாதிகளைத் தீர்த்திருக்கிறார்.திரு நீற்றைச் சிறப்பித்துப் பாடியும் உள்ளார்.இறைவனிடம் விபூதியை வேண்டியும் உள்ளார்.
அடுத்துச் சாதியும் மதமும் பொய் என்னும் அகவல் வரிகளைச் சுட்டிக் காட்டிச் சைவ சமயமும் பொய் என்கிறார்கள்.அகவலில் வரும் தத்துவங்களும் ஐந்தொழிலும் ஆணவமும் அவத்தைகளும் பதி நிலை,பசு நிலை,பாச நிலைகளையும் விளக்குவது சைவ சித்தாந்தம் மட்டுமே யாகும்.சைவ சமயம் பொய் என்பவர்களால் அகவலில் வரும் சத்தினி பாதம்(1095) என்னும் சொல்லுக்கு உரிய பொருளைக் காண மாட்டார்கள்.அகவலில் வரும் மந்திரத்தையாவது அறிவார்களா?அகரமும் உகரமும் அழியாச் சிகரமும் வகரமும் ஆகிய வாய்மை மந்திரம்(1315-1316) எது? எது?அகரமும் உகரமும் சேரந்தால் வருவது ஓம் என்னும் பிரணவ மந்திரம் ஆகும்.அழியாச் சிகரமும் வகரமும் ஆகிய வாய்மை மந்திரந்தான் சிவ என்னும் மந்திரம்.ஐந்தென எட்டென ஆறென நான்கென(1317-1318)முந்துறு மறைமுறை மொழியும் மந்திரம் எது? எது?ஐந்தென வருவது சிவாய நம என்னும் முத்திப் பஞ்சாக்கரம்.ஆறென வருவது ஓம் நமச்சிவாய என்னும் இறைவன் திரு நாமம்.எட்டென வருவது ஓம் ஆம் ஔம் சிவாய நம ஆகும்.நான்கென வருவது ஓம் சிவாய ஆகும்.இவ்வரிகளுக்கு வேறு பொருள் கூற முடியாது.அழியாத வாய்மை மந்திர மாகிய சிவ என்னும் மந்திரத்திலுள்ள சி என்பது அருட்பெருஞ்சோதியாகவும் வ என்பது தனிப் பெருங்கருணையாகவும் அமையும்.விண்ணப்பத்தில் சைவ சமயம் என்று தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளாரே என்று கூறுபவர்களுக்கு உரிய விடை வருமாறு.
எல்லாருக்கும் பொது நோக்கம் வர வேண்டும் என்பதற்காக அங்கு அவ்வாறு கூறப்பட்டது.அதற்கு நீங்கள் கருதும் சைவ சமயம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.இது தூல அருந்ததி என்னும் நியாயத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாம்.வானிலுள்ள அருந்ததி என்னும் குறைந்த ஒளி வீசும் நட்சத்திரத்தை எளிதில் காண முடியாது.எனவே அருந்ததி நட்சத்திரத்திற்கு அருகிலுள்ள ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் காட்டி இதுதான் அருந்ததி நட்சத்திரம் என்பர்.பிரகாசமான நட்சத்திரத்தை அடையாளம் கண்டு கொண்டால் இதுவல்ல அருந்ததி நட்சத்திரம் என்று கூறிப் பிரகாசமற்ற உண்மையான அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டுவர்.சைவ சமயத்தில் தீட்சை என்பது முக்கியமான தாகும்.இந்த ஆசாரத்தைத்தான் வள்ளலார் மறுத்தாரே யன்றிச் சைவ சமயத்தை மறுக்க வில்லை.வள்ளலார் சைவ சமயத்தை மறுத்தார் என்றால் சிவ பரமாக அநேகம் பாடல்களைப் பாடியது அர்த்த மற்றதாகி விடும்.அனுபவ மாலை என்பது வள்ளலார் அனுபவித்து எழுதிய பாடல்களாகும்.88,89-ஆம் பாடல்களை எல்லாரும் ஏற்கனவே எடுத்துக் காட்டி யுள்ளனர்.அதில் பித்தர் என்று பெயர் பெற்றார்க்குப் புறச் சமயத்தார் பெயர் உட்பட அனைத்துச் சமயத்தாரின் கடவுள் பெயர்களும் பொருந்தும் என்கிறார்.பித்தர் என்று பெயர் பெற்றவர் ஒரே ஒருவர்.சுந்தர மூர்த்தி நாயனாரால் பித்தர் என்று பட்டம் பெற்றவர் சிவ பெருமான் என்பது யாவரும் அறிந்த உண்மை.சிவ பெருமானுக்கு அருட் பெருஞ்சோதி ஆண்டவர் என்னும் பெயர் பொருந்தாது என்று யாராவது கூற முடியுமா?இந்த உண்மையை அறியாதவர்கள்தான் இதற்கு முன் 87-ஆம் பாட்டிலுள்ளபடி யானையைக் கண்ட குருடர்கள் ஆவார்கள் என்பது தெளிவு. அனுபவ ஞான மற்றவர்கள் கூறுவன அனைத்தும் பொருளற்ற பிதற்றல்களாகு மென்பது சத்தியம்.இறைவனின் ஞான நடனத்தைக் கண்டவர்களுக்குத்தான் சிவ பெருமானும் அருட்சோதி ஆண்டவரும் ஒருவரே என்னும் உண்மை புரியும்.சுட்ட திரு நீறு பூசித் தொந்தோம் என்று ஆடுபவர் (நடேசர் கீர்த்தனை)நடராசப் பெருமான் என்பதைப் புரிந்து கொண்டால் திரு நீறு பூசுவது யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.விருப்ப மற்றவர்களும் விபூதியைப் பூசிக் கொள்ளத்தான் வேண்டுமென்பதுதான் தவறாகும்.கல்லா லெறிந்து வழிபட்ட சாக்கியர் என்னும் புறச் சமயத்தார் நாயன்மார்களுள் ஒருவர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.நன்றி.வாழ்க.
Saturday, April 2, 2016 at 20:44 pm by Damodaran Raman
Durai Sathanan
Dear Friends of the One and the Same Soul of Greater Grace Perfection, Best Greetings! Both comments seen above seem to be the same deluded deflections of the same wavelength, which originates from the very same orbital only. Please blame me not, if you try to say that I am wrong here. Maybe, I might not have explained well to help you understand better. Therefore, I humbly suggest you to go deeper and deeper by yourself beyond our worldly bondages/attachments in order to gain the insight revealed in the above verses.

I truly acknowledge that Vallalar never approves any kind of this worldly wrong add-ons or wrong belief-systems. At the same time, we should also never fail to understand that Vallalar has never meant a new division among us/humanity/all sentient beings in the name of a new condition or a constraint of His Path. Thus, constructing or imposing a new clutch (Achara) in the name of our Sutha Sanmargam, without understanding Vallarperuman's inner spirit or inner message of His Great Precepts is also a Big Sin. Since, such a clutch may also be considered as a new barrier, and that can also make this present knowledgeable world come not, and practice not our path. So, let us be careful, and stay focused faithfully and mercifully, by unifying all souls, regardless of any known or unknown differences. As a matter of fact, unification regardless of differences is the real meaning for giving up the worldly attachments (Acharas). Please figure out this nature truth, and give up the unnecessary ego and fights! May God bless us all with the Blissful Immortal Life!

Please know that there is no division among God. Divisions are our own creations only. Nothing but the byproducts of human mind! So, we need to be very cautious! God is experienced in our inmost Shelf - the Soul only, and that even by HIS Immense Grace only. According to Vallalar, to attain that ultimate experience, first of all, we need to activate and augment our own selfless compassion fire. Since, a small fire only can manifest into a Big Wild Fire. Therefore, mere talks are like a mirage only!

Again, the concept of Multi Gods or New God are indeed too funny! They are nothing but human philosophies only, not the pure nature experience. And hence, that kind of thoughts are not even spiritual, rather they are either physical or mental misconceptions only. Sutha Sanmargam (The Universal Path of Nature Truth) tries to help us attain our ultimate soul experiences, surpassing our spiritual world. So, let us not get confused. Our time is running out.

Today, many across this globe, even who do follow different paths have also clearly come to know about the Greater Nature Truth revealed in the Sutha Sanmargam by His Grace. As an evidence, we see that The UNO has already started a worldwide INTERFAITH Movement as per our Vallalarperuman's "One World and One God's Vision and Mission" only. Therefore, let us not always tend to be divided unknowingly based on our own outer world perception. Please, let us begin to activate our Inward Immortal Light instead. What is the use of our unnecessary argument? If there is any big use of it, please let me know about it. Let us never forget that Vallalar only can run the Sutha Sanmargam forever, not we. But, fortunately, we can rejoice in it limitlessly... Best Wishes! May God bless us with victory here in this birth itself! ArutPerumJothi / Vast Grace Field...

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
Saturday, April 2, 2016 at 22:40 pm by Durai Sathanan
ஸ்வாமி  இராஜேந்திரன்
குறுகிய கண்ணோட்டத்தோடு எதையும் காண்பதும் மனித குலத்தின் வேற்றுமைக்கு வித்திடுபவைகளுமே ஆசாரங்களில் மிகப் பெரும் ஆசாரம்.வேற்றுமை உணர்வே மிகப் பெரும் மதம். அதற்க்கு, மேலே காணப்படும் கருத்துக்களே உதாரணம்.அன்புத் தெய்வமாம் வள்ளலாரை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். அனைத்து பற்றுக்களும் தானாகவே நீங்க வேண்டும். தேவையான கால அளவு கொடுக்க வேண்டும். எதையும் வற்புறுத்தக்கூடாது. எங்கள் தெய்வம், உங்கள் தெய்வம் ஆகிய அனைத்து தெய்வங்களும் இராமலிங்க ஸ்வாமிகள் மீது மாறாகாதல் கொண்டு அவருடன் கலந்து விட்டன காண்பீர்!உண்மைப் பொருளை உணர்க - எங்கள் மனதிற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும் மனதின் பிடியில் மாட்டாதீர்!
Sunday, April 3, 2016 at 00:01 am by ஸ்வாமி இராஜேந்திரன்
Logith sharma
"ஒளிதேகம் பெற்ற வள்ளலார் திருநீறு தரிதிருந்தாரா? இல்லை வள்ளலாரால் ஒளிதேகத்தில் திருநீறு தரிக்கத்தான் முடியமா? இல்லை வள்ளலார் வழியில் / சுத்த சன்மார்க்க வழியில் வாழும் நாம் தான் திருநீறு பூசிக்கொண்டு ஒளிதேகம் பெறமுடியுமா? - ஐயகோ தாங்கள் கூறுவது ஒன்றுமே புரியவில்லையே ஐயா .

ஐயா, தாங்கள் தங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறு விதமான கருத்துக்களை தருகிறீர்கள் , ஒன்று முழுக்க முழுக்க 'சுத்த சன்மார்க்கம் சார்ந்ததாக உள்ளது ' மற்றொரு பதிவு ''சுத்த சன்மார்க்கம் சாராததாக" உள்ளது - இதயெல்லாம் நாங்கள் எற்றுகொள்ளலாமா/கூடாதா ஒன்றுமே புரியவில்லையே ஐயா.
Sunday, April 3, 2016 at 12:35 pm by Logith sharma
narayani julu
"எங்கள் மனதிற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும் மனதின் பிடியில் மாட்டாதீர்!" அருமை இராஜேந்திரன் சார். உண்மை தான். மனதின் பிடியில் மாட்டக்கூடாது. நாம் நம் வள்ளற்பெருமான் என்ன போதித்தார்கள் என முதலில் சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டும். அதன்படி நடந்தே ஆக வேண்டும் என யாரையும் சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம் பொறுத்தது. ஆனால் நம் மனம் போனபடி வள்ளற்பெருமானின் கருத்துக்களை மாற்றி சொல்ல முடியாது. இது அனைத்து மார்க்க நெறிக்கும் பொருந்தும்.

சர்மா சார், சொல்வது போல் மாற்றி மாற்றி அவரவர் மனம் போல் சொல்கிறார்கள்.வள்ளற்பெருமான் சொன்ன கரி(யானை) கதை சரியாக இங்கு பொருந்தும்.

துரை சார் பாடல் ஞானசரியை.அருமை. இப்பாடல் மூலம் அறிவது இதற்கு முன் உள்ள எதனாலும் பயனில்லை என்ற போது சைவ சமய அடையாள நமக்கு கூடவே கூடாது என்பது தானே உண்மை. யாரும் தன் ஒரு தவறை ஒத்துக்கொள்ளவதினால் மற்றவை தவறாகிவிடாது.அப்படி எனில் எதற்கு சத்விசாரம்? யானைக்கும் அடிசறுக்கும் என்பது நம் முன்னோர் பழமொழி. சமயப்பற்றுள்ளவர்கள், சாதி பற்றுள்ளவர்கள், உருவ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் தான் தன்னை மாற்றிக் கொள்ள முன் வரமாட்டார்கள். அவர்களே புரிந்துக் கொண்டால் அன்றி நம்மால் புரிய வைக்கமுடியாது. ஆனால் நாம் சத்விசாரத்தில் உண்மையறிய வரும் போது சந்தோசமாக ஒத்துக்கொள்வதில் ஒன்றுமில்லை.

அடுத்து தாமோதரன் சார். திருப்பி திருப்பி வள்ளற்பெருமான் கைவிட்டு விட்ட சமயத்தையே சொல்கிறார்கள். வள்ளற்பெருமான் சமயப்பாடல்கள் சாருக்கு பிடித்துள்ளது. எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதுவே சுத்த சன்மார்க்கம் என்று சொல்லிவிடாதீர்கள். உங்கள் வரிகள்: “இவர் ஒன்றும் வள்ளலார் விபூதி பூசுவதை விட்டு விட்டார் என்று கூறிய தில்லை.மாறாகக் கந்தசாமிப் பிள்ளையவர்கள் இறுதி வரை விபூதி பூசியவராய்த்தான் திகழ்ந்தார்.தொழுவூர் வேலாயுதனாரும் வள்ளலார் விபூதி பூசுவதை விட்டு விட்டார் என்று அறிவித்த தில்லை.” இவர்கள் வள்ளற்பெருமான் மேல் மிகுந்த பக்தி வைத்திருந்தார்கள். ஆனால் சுத்த சன்மார்க்கப் பயனை பெறாதவர்கள். உண்மை இதுவே. சுத்த சன்மார்க்கப் பயனை பெற வில்லை என்றால் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று கூறுவதில் தவறேதும் இல்லை. வள்ளற்பெருமான் வரிகள் இதோ: உண்மை சொல்ல புகுந்தாலும் தெரிந்துக்கொள்வாரில்லை.மற்ற வரிகளுக்கு ஏற்கனவே பதில்கள் பல தடவை தரப்பட்டுள்ளது.சமயக்காலத்து நிகழ்வுகள்,பாடல்களையே எடுத்து சொல்கிறார்கள்.சமயக் கருத்துக்களையே தருகிறார்கள்.படிக்க நல்ல தான் இருக்கிறது.இங்கு தேவையில்லை.எங்களுக்கு எங்கள் மார்க்கத்திற்கு தேவையே இல்லை. பரிதாபம் படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. எல்லாமே ஒன்றெனும் ஒன்றுக்குள் தான். எல்லாமே அதன் சாயல் தான். ரூபாய் 100 க்குள் 10,20,30,40.. உள்ளது. ஆனால் 10,20.30.40 ரூபாய் 100 மதிப்பாகாது. சாயல் முழு பரிபூரணத்தைக் காட்டாது. அப்படியெனில் தவறாக கருத்தைச் எவர் சொன்னாலும் அவை அதனுள் தானே என ஏன் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள். உங்கள் பதிலேயே உங்கள் கேள்விக்கு பதில் உள்ளதே. அனைத்தும் சிறப்பையே விவரிக்கிறது.அளவில்,அறிவில் உயர்வு தாழ்வு காணப்படுக்கிறது. சைவ சமயத்தில் சிவன், சிவம், பரசிவம் ஆகும். வள்ளற்பெருமான் சுத்த சிவம் என்கிறார்கள்.ஏபிஜெ யின் ஆய்வு நூல் தெளிவாக விளக்குகிறது. கடவுள் குறித்து விட்டு விடுவோம். ஆனால்,வள்ளற்பெருமான் கடவுள் நிலைக்காண ஒரு புதிய தனி பொது வழியை நமக்கு தந்துள்ளார்கள். இவ்வழி சமய,மதம், மார்க்க வழிகளிலிருந்து முற்றிலும் வேறுப்படுகிறது.

அடுத்து,சிவமயம் சார்க்கு வணக்கம். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பது போல். சமயம் பொய் என்ற வள்ளற்பெருமான் மீது மதிப்பு உண்டு என்ற வார்த்தையால் நெகிழ்ச்சியடைந்தேன். ஒரு தனி மார்க்கத்தை வரவேற்கும் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.சிவமயம் சார் உங்கள் சைவ சமயத்தின் சிறப்பு,உண்மைகள் அளவிடமுடியாது. மாபெரும் மார்க்கம். அதே நேரத்தில் வள்ளற்பெருமான் அருளிய வழி எல்லாருக்கும் எளிதாக கைக்கூடும். பொதுவாகவும்,சாதரண தரத்திலும் உள்ளது. நன்றி.----அன்புடன் டாக்டர் நாராயணி.
Sunday, April 3, 2016 at 17:15 pm by narayani julu
Damodaran Raman
டாக்டர் நாராயணி ஜுலு அவர்களே,உங்களுக்குச் சமய அறிவும் கிடையாது:சாத்திர அறிவும் கிடையாது என்பதை உங்கள் விமர்சனம் தெளிவு படுத்துகிறது.வள்ளலார் ஒன்றும் சைவத்தையோ சிவ பெருமானை வணங்குவதையோ விட்டு விட வில்லை என அருட்பா ஆதாரத்துடன் கூறியதை மறுக்க முடியாமல் எ.பி.ஜெ.அருள் வீட்டுக் கிளிப்பிள்ளை போல் சும்மா வெறுமனே அவர் கூறியதையே திருப்பித் திருப்பி ஒப்பிப்பதால் உண்மை ஒருபோதும் பொய் ஆகி விடாது.அகவல் கூறியது பொய்யா? அனுபவ மாலை கூறியது பொய்யா? உங்களுக்கும் உங்கள் தலைவிக்கும் அகவல்,அனுபவ மாலை,நடராசபதி மாலை போன்ற அருட்பாக்கள் வள்ளலாரால் கை விடப்பட்ட பாக்கள் ஆகுமா?அல்லது ஆறாம் திரு முறைப் பாடல்களையும் அற்ப அறிவுடன் வள்ளலார் இருந்த போது பாடினார் என்று கூறுவீர்களா? வள்ளலார் சைவத்தை விட வில்லை என்பதை உறுதி படுத்தினால் எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாமல் எத்தனை காலந்தான் உங்கள் மனத்தில் தோன்றும் பொய்க் கற்பனைகளை வள்ளலார்மேல் ஏற்றுவீர்கள்?வள்ளலார் மேல் எந்தவகை பய பக்தியு மில்லாமலும் அவர் கூறியதை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கும் உங்கள் துணிவு அபாரம்!எதோ நீங்களும் உங்கள் எ.பி.ஜெ அருள் மட்டும் சன்மாரக்கத்தின் பலனைப் பெற்றுக் கொண்டிருப்பதாகக் கதை கூறுகிறீர்களே!என்ன பலனைப் பெற்றீர்கள் என்பதை விளக்குங்கள் பார்க்கலாம்?
சாகாக்கல்வி என்றால் என்ன வென்றே உங்கள் தலைவிக்கும் தெரியாது.உங்களுக்கும் தெரியாது.இதுதான் உண்மை நிலை.ஏன் வீண் விவாதம்?கொடி கட்டிக் கொண்டதால் உண்மையை எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்று உண்மையைச் சொல்ல வந்த வள்ளலார் கூறினார்.அந்த உண்மையை நீங்கள் அறிந்திருந்தால் விளக்கலாமே? சாகாக்கல்வியைத் தெரிவிக்கும் வேகாக்காலாதிகளை உள்ளது உள்ளபடி விளக்குங்கள் பார்க்கலாம்!
மற்றவர்கள் எல்லாம் சன்மார்க்கத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க வில்லை என்று குற்றம் அதுவும் வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்கள் மேல் கூறும் நீங்கள் என்ன முழுமையான பலனைப் பெற்றுக் கொண்டீர்கள் என்பதையாவது முடிந்தால் விளக்குங்கள்.சாகாக்கலை அனுபவம் உங்களில் யாருக்கு இருக்கிறது?
Sunday, April 3, 2016 at 22:33 pm by Damodaran Raman
ஸ்வாமி  இராஜேந்திரன்
மிகச் சிறந்த விளக்கம் துரை அய்யாவும் தாமோதரன் அய்யாவும் கொடுத்திருக்கின்றார்கள். தாமோதரன் அய்யா, சைவ மதம் ஒரு சிறு நெறி, அற்ப நெறி எனவே வள்ளலார் ஒருபோதும் அந்நெறியை பற்றியதே இல்லை எனும் அன்பர்களுக்கு சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார். நாராயணி அம்மையாரும் லோகித் ஷர்ம அவர்களும், எங்கே பெருமானின் அறிஉரைகள் நீர்த்துபோய் விடுமோ என்று அச்சப்படுவதாக தெரிகின்றது. அச்சமும் அவசரமும் தேவையில்லை. இறைவனின் ஆலைகள் மெதுவாகவே சுழல்கின்றன. வேண்டிய அனைத்தும் தகுந்த நேரத்தில் நிறைவேற திருவருள் காரியப்படும்.Take the middle path until your internal experience. இஸ்லாத்தை கத்தி முனையில் பரப்பிய மனிதர்களை நாம் மறந்து விடக்கூடாது.சத் விசாரத்திலும், ஜீவகாருண்யத்தை நம் வாழ்க்கைக்குள் கொண்டு வரும் முயற்சியிலும் நமது நேரத்தை செலவிடுவோமாக! அருட்பெருஞ்சோதி !
Monday, April 4, 2016 at 04:19 am by ஸ்வாமி இராஜேந்திரன்
Durai Sathanan
Beloved kith and kin, May God bless all of us with the safe shelter of HIS Supreme Grace so that we always stay focused firmly as per HIS true guidance for all of us to attain our blissful immortal Life! Well. First of all, I want to make sure that we should not feel hurt now as I would like to speak the truth here openly. Please forgive me, in case if you feel so. The actual fact is that we never try to know the inner truth revealed both in the above prayer”எல்லாமுடைய…கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், …எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம்.…எங்களுக்குள்…நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்…தேவரீர்…வந்தனம்! வந்தனம் ! --” and in the GnanaSariyai song " கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே…விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே." That is why, you (mainly Ms. Narayani Jul, Mr.Logith Sharma, etc.) always repeat the same stuff for years together, speaking the same square peg in a round hole. Therefore, I request you to do one important thing first, which is nothing but trying to know the inner true meaning of the above prayer and the song as well before you open your unnecessary arguments here. Similarly, you know not about the nature truth of the ThiruNeeru as well. Better to seek the truth rather than swoop into fights. Best wishes! ArutPerumjothi…
Monday, April 4, 2016 at 07:42 am by Durai Sathanan
Apj Bala
Thanks ,thiru Damodaran raman avarkale, sila anbarkalukku satru aluththamaga than vilakkam kura vendiulladu
Monday, April 4, 2016 at 17:12 pm by Apj Bala
venkatachalapathi baskar
வள்ளல் பெருமான் விபூதி/திருநீறு தரிக்க் கூடாது அல்லது பூசிக் கொள்ளக் கூடாது என்று திருவருட்பாவிலோ அல்லது உரைநடைப் பகுதியிலோ எங்கு கூறியுள்ளார்கள் என்பதை யாரேனும் சற்று ஆதாரத்துடன் தொவித்திருந்தால் அதனை வெளிப்படுத்தலாமே.

திரு.லோகித் சர்மா மற்றும் டாக்டர் நாரயணி ஜுலு ஆகியோர் இதுகுறித்த ஆதாரங்களை குறிப்பிட்டு கருத்துக்களை கூறினால் நன்றாக இருக்கும்.
Tuesday, April 5, 2016 at 09:08 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
வள்ளல் பெருமான் நித்திய கரும விதியிலே விபுதியினை தரிக்க வேண்டும் என்ற பலமுறை கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் இதோ:

நித்திய கரும விதி

1. சாதாரண விதி

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து, விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

பின் இளம் வெந்நீரில் குளித்தல் வேண்டும். விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.

இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் - இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும்.

.....செய்த பின், தேகசுத்தி செய்து திருநீறணிந்து சிவத்தியானஞ் செய்து பின்பு படுக்க வேண்டும்.


சிறப்பு விதி

2. எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்றுநேரம் செவ்வையாக உட்கார்ந்து, கடவுளை ஊன்றி நினைத்து எழுதல்.

பின்பு திருநீறு தரித்துக்கொண்டு, ஏகாந்தமாக ஓரிடம் பற்றியிருந்து, சூரியனுதயமாகிற வரையில் கடவுளைத் தியானஞ் செய்துகொண்டிருத்தல்.

இந்த ஆதாரங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளலாமா அல்லது ஏற்றுக்கொள்ளாமலிருக்கலாமா?

வள்ளல் பெருமானிற்கு அற்ப அறிவ இருக்கும்போது இது எழுதப்பட்டிருக்கலாம் அல்லது சயமப்பற்றுடன் இருக்கும்போது எழுதப்பட்டது அதனால் புறக்கணிக்க வேண்டும் என யாரும் கூற முடியாது. ஏனெனில் வள்ளல் பெருமானிற்கு
1) அற்ப அறிவே இருக்க முடியாது என முன்பே நிறுவப்பட்டது. (இப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது! ஐயகோ!)

இரண்டாவதாக சாதி, சமயம், மதம், பொய் என வள்ளல் பெருமான் ஆதியிலே உணாந்திருக்கிறார். மேலும் தான் சிறுநெறியையோ அல்லது பொய்நெறியினையோ பற்றவில்லை என திருவருட்பாவில் பல இடங்களில் கூறியுள்ளார்.
Tuesday, April 5, 2016 at 09:23 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
This is for Mr.Sivadurai Sivamayam sir for your perusal: According to Thirumular and many others that Sanmarkam is a part of Saivam; hence, it has a right to use and or practice certain things which are part and parcel of Saivam. For more details, please see, Thirumalar's Thirumanthiram, ஐந்தாம் தந்திரம் (சுத்த சைவம் முதல் உட்சமயம் என 20 வது பதிகங்களில் சைவத்தின் பல பிரிவுகளை விவரித்துள்ளார்-சன்மார்கத்ததையும் சேர்த்து)
Tuesday, April 5, 2016 at 09:33 am by venkatachalapathi baskar
Durai Sathanan
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கீழே வெளியாகியுள்ள ஒரு பதிவில், சேலம் திரு. குப்புச்சாமி அய்யா அவர்கள் குல்லா அணிந்துகொண்டு பேசுகிறார்கள். அதற்காக அல்லாவை வணங்குகின்ற முஸ்லீம்கள் இது எங்கள் அடையாளம் என்று வழிய வழக்கிட்டு மானம் கெடுப்ப தில்லை. அதற்குச் சட்டமும் இவ்வுலகில் இல்லை! நான் ஆப்ரிக்காவில் பணியாற்றிய போது ஒரு அன்பர் சிலுவை தாங்கிய ஒரு அழகிய செயினை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். அதை ஒரு வருடத்திற்கும் மேலாக, அதுவாக இத்து விழுகின்றவரை அணிந்திருந்தேன். அந்நாட்களில் சிலசமயங்களில் சர்ச்சுகளுக்குச் செல்லக்கூடும். அங்கும் எல்லாம் வல்ல கர்த்தரை வணங்குவதற்கு எனக்கு நல்ல வாய்ப்பை ஆண்டவன் நல்கினான். ஆனால், அவர்களின் ஆச்சாரங்கள் மட்டும் எனது மனதில் ஒருநாளும் பற்றிக்கொள்ளவில்லை. எனினும், எனது உலகியலை ஒதுக்கி, ஊனுடலைச் சுருக்கி, ஆனவத்தை உருக்கி, அன்பைப் பெருக்கி ஆண்டவரை அங்கே அழுது தொழுதிருக்கின்றேன். அங்கு, “நீ இந்து! இங்கே வராதே!” – என்று, என்னை ஒருபோதும் அவர்கள் சொன்னதில்லை. மாறாக அடிக்கடி வாருங்கள் என்றுதான் அன்புருவர்.

அதுபோலவே, பலப்பல சமயமத ஆலயங்களுக்குச் சென்று ஏக இறைவனை இறைஞ்சி ஏத்தி வணங்குவதற்கு, எனக்கு எக்காலத்தும், எவ்விடத்தும் இதுநாள்வரை எந்தத் தடையும் யார்மூலமாகமும் வராதவண்ணம் ஆண்டவர் நன்கு பார்த்துக் கொண்டார். ஆனால், இங்கு சுத்த சன்மார்கமென்று பேசுகின்ற ஒருசில அன்பர்கள்தான், நான் சொல்லும் திருநீறு பற்றிய நற்குறிப்பையும் அறியாது, ‘திருநீறு’ - என்னும் வாசகம் புறத்திலுள்ள ‘திருநீறை’ மட்டுமே குறிப்பதாக அவர்கள் அறியாமையில் நினைத்துக்கொண்டு ஒன்றிருக்க ஒன்றைச் சைவசட்டம் என்றும், ஆசாரத்தடையென்றும் உளருகின்றார்கள். ஆனால், அவர்களின் நோவையும் சோவையும் இன்னும் இன்றுவரை வெல்ல முடியவில்லை. அதை முதலில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அந்த இந்திரிய- கரண ஒழுக்கமும் இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை. பேசுவதோ சுத்த சன்மார்க்கம்! முதலில் நோவையும், சோவையும் எப்படி நீக்கிக்கொள்வதென்று கேளுங்கள். அதற்கு முயலுங்கள்! அதன் பிறகுதான் நீங்கள் பேசுகின்ற ‘புதுக்கடவுள்’ சுத்த சன்மார்க்கத்தை இந்த அறிவு உலகம் காது கொடுத்துக் கேட்கும். சாருலக வாதனையைத் தவிர்த்தவர்க்குத்தான் சத்தியஞான ஜோதி உதயமாகும். சுத்த சன்மார்க்க ‘இந்திரிய-கரண’ அடிப்படை ஒழுக்கங்களால் சாருலக வாதனையைத் தவிர்துக்கொள்ளலாம். நன்நம்பிக்கையோடு விரைந்து முயலுங்கள்! இஃது அனுபவம்!!

திருநீறை ‘விபூதி’ – என்றும், பகர்கின்றார்கள். ‘வி’ என்பது ‘உபசர்க்கம்’. ‘பூதி’-என்பது அசுத்தமாய பூதகாரிய தேகாதிகளைக் குறிக்கும். ஆக, விபூதியென்பது அத்தகைய பூதியை நீக்க வந்தது என்று பொருள் கொள்க. “திருநீறில் மருந்திருக்குத் தெரியுமா?” - ஒரு தமிழ்ப்பாடல். நான் அந்த உலகியல் மருந்தைப் பற்றி முடிவாகக் குறிப்பிடவில்லை எனது மேற்படித் திருநீறு பற்றிய பதிவில். நான் குறிப்பிடுவது ‘ஞானமாமருந்து’. அஃது என்னவெனில், ‘மாதயவு’ (தனிப்பெருந்தயவு). அது எப்படியெனில், தமிழில் ‘நீர்’ - என்றால் தண்ணீர். ‘நீறு’ - என்றால் ‘மந்திரம்’. (எ-கா) “மந்திரமாவது நீறு” - தேவாரம். ஆகையால், திரு + நீறு என்பது திரு+ மந்திரம் = ‘திருமந்திரம்’ என்ற தமிழ்ப்பதத்திற்கு அனந்த தாத்பரியம் உண்டு. ஆனால், நான் குறிப்பிடும் திருமந்திரம் யாதெனில் ‘அருட்பெருஞ்ஜோதி’ எனும் ‘மகாமந்திரம்’. ‘மகா’ - என்பது திருவையே குறிக்கும். ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது எல்லாம்வல்ல ஆண்டவருடைய இயற்கை விளக்கமாகிய தனிப்பெருங்கருணையையே குறிக்கும். அதைத்தான், ‘பெருந்தயவு’ - என்றும் ‘மாதயவு’ - என்றும் குறிப்பால் அறிந்திட திருநீறு பற்றி, இச்சிறுவன் அவன் உள்ளிருந்து இசைக்க எழுதியது. ஆகவே, நமது சிறு தயவைப் பெருக்கி, அவன் பெருந்தயவை பெற்றிடுவோமாக. அருட்பெருஞ்ஜோதி...
Tuesday, April 5, 2016 at 16:41 pm by Durai Sathanan
Apj Bala
தெளிவாக கூறினீர் திரு.துரை சாதனன் . திருநீறை மறுக்கும் அன்பர்கள் அதை விடுத்து, ஜீவகாருண்யம் மற்றும் பரோபகாரம் குணத்தை உலக ஜீவர் களிடம் பரவலாக்க முயல வேண்டும்.
Wednesday, April 6, 2016 at 17:42 pm by Apj Bala