Karunai Sabai-Salai Trust.
திருமந்திரமும் திருவாசகமும் சுத்த சன்மார்க்க நூல்கள் அல்ல - ஏபிஜெ அருள்.

திருமந்திரம் பற்றி தனியாக பேசுவது என்றால் சாதாரண அறிவில் பேசக்கூடிய சாதாரண நூல் அல்ல. இப்புனித சைவ நூல் புராண காலம், வேதகாலத்துக்கு எல்லாம் முந்திய தொல்பெரும் பழமைக் காலத்து குறிப்புக்கள். ஒழுக்கம் நிரப்பிக்கொள்வதற்கும், முக்தி பெறுவதற்கும் உண்மை வழிக் காட்டும் மந்திரம் பெற்றது.
அதே போல் தான் திருவாசகமும்.
மெய்ப்பொருளை தரும் வார்த்தையுடையது.தோத்திரத்துக்கு சிறந்த சைவ சமய நூல் ஆகும்.

ஆனால்;

மேற்படியான சைவ சமய மாபெரும் புனித நூல்கள்
நம் மார்க்க நூல்கள் அல்ல.
சில காரணங்களின் அடிப்படையில்இதை எளிதாக அறியலாம்.

திருமந்திரத்தில் உள்ள திருமந்திரம்;

”நமசிவாய”
”சிவாயநம”

நம் மந்திரம் இதுவல்ல.

பக்கம் 408ல்;
சிவாயநம; நமசிவாய...... முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அசுர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாக்ஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும்,தியானித்தும், அர்ச்சித்தும்,உபாசித்தும், சமாதிசெய்தும்,சுவாசத்தை அடக்கியும்,விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை எடுப்பது வியர்த்தம். (வியர்த்தம் என்பது பலனின்மை).
சுத்த சன்மார்க்கமே சிறந்தது என்கிறார் நம் வள்ளலார்.
திருவாசகத்திலும் இந்த பஞ்சாக்ஷரமே சொல்லப்படுகிறது. சைவ சமயக் கடவுள் சிவனது உண்மை சொல்லும் புராணமே திருவாசகம்.அவதாரம் குறித்து வியம்புகிறது.
ஆங்கில வருடம் புரட்டாதி மாதத்தில் 5 ம் நாள் வள்ளலார் உபதேசிக்கையில்; (பக்கம் 439ல்);
”....மேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள். அபர மார்க்கத்தில் சிலர் உப்பு வகைகளின் பேதமென்றும் ஓஷதி பேதமென்றும் பூதபேத மென்றும் சொல்லுவது உபாயமார்க்கம். அக அனுபவமே உண்மை. உபாய வகையாகிய அபரமார்க்கம் தேக பூஷணாதி காமிய சித்தியைத் தரும். உண்மை, நீக்கமற்ற சொரூப ஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயங்களிலுமில்லை. அப்படி யிருப்பதாகச் சொல்லியிருப்பதும் ஏகதேசமென்றறியவும். மேற்படி ஏகதேசங்கள்... மந்திரங்களிலும் மேற்படி மூன்றும் வழங்குகின்றபடியால், ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தையடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க, மகத்துவங்க ளுண்டாகும். மேலும் மேற்படி உயர்வுடைய தங்கத்தில் விக்கிரகஞ் செய்து வைத்து ஓஷதியாதி லவணங்களை அதற்குச் சேர்த்து வைத்தால், விசேஷ சித்தி விளங்கும். இஃது திரிசியக் காட்சி. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை. மேற்படி மூன்றையும் இலக்ஷியமாகவே கொள்க. உபாய வகையான வாச்சிய திரிசியக் காட்சிகள் பரோபகாரம். (?) ஆதலால், சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். இஃது ரகசியம்.”

மேலும் பக்கம் 407ல் வள்ளலார் குறிப்பிட்டு சொல்கையில்;

சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்தினும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை யுண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா மூர்த்திகள் ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்குமேல் இரா.

“பக்கம் 402ல்

"சுத்த சிவம் என்பது சிவம், பரசிவம் இரண்டையும் மறுத்தது.
சுத்த சன்மார்க்கம் என்பது சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் மறுப்பது" என்கிறார்கள் வள்ளலார்.

பக்கம் 403ல் முடிபாக வள்ளலார் சொல்கிறார்கள்:

"ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ அதுபோல் சுத்தசன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும்அநந்நியம் (அந்நியமல்ல)" என்கிறார் வள்ளலார்.

அடுத்து,

திருமந்திரம் ”முக்தி” பெறும் வழியைக் காட்டுகிறது.
சமாதி குறித்து வியம்புகிறது.
நம் வள்ளலார் சொல்கிறார்கள்:
சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜக் பழக்கமே சுத்த சன்மார்க்கப்பழக்கம்.


மேலும்;

முக்தி என்பது நிலைமுன் உறுசாதனம்.
ஆனால் இங்கு சித்தி என்ற நிலை சேர்ந்த அனுபவமே பெறப்படுகிறது.

 அடுத்து;திருமூலர் அறுபத்து மூன்று மெய்யடியார்களில் ஒருவர் ஆவார்.

பக்கம் 374ல் நம் வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

”பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே யொழிய வேறில்லை. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற சௌராதி சண்டை பரியந்தமும்* தத்துவமே யாம். சைவ புராணம் விஷ்ணு புராணம் முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே. இதுபோல் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய மகான்களின் சரித்திரமும் தத்துவசித்தியே. மேற்குறித்தவர்கள் பேரால் ஒவ்வொரு மஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள். மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தாத்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக் கூடும். இது போலவே திருவிளையாடல் பாரத பாகவதங்களு மமைத்துக் கொள்க. ஒருவாறு.”
ஆக,
சமய ஸ்தோத்திரப் பாடல்கள் தவிர உள்ள அனைத்து திருவருட்பாடல்களே நம் மார்க்க நெறிப்பாடல்கள். நம் மார்க்க நெறி அறிய 28 பாசுரப்பாடல்களில் காணலாம்.
சைவ சமய மற்றும் சிவபுராணமான திருமந்திரம் மற்றும் திருவாசகத்தில் நாம் லட்சியம் வைக்க வேண்டிய அவசியமில்லை.
சுத்த சன்மார்க்கத்தை உள்ளது உள்ளது படி அறிவோம். மற்றவையில் லட்சியம் வைக்க வேண்டாம்

இது வள்ளலார் கட்டளை.
சத்தியம். சத்தியம்.
அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்.

5 Comments
narayani julu
U”....இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும்.:
இது நம் வள்ளற்பெருமான் உபதேசித்தது.
நம் மந்திரம் ....அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
நம் ஆண்டவர் ....சுத்த சிவம். நம் மார்க்கம்.... சுத்த சன்மார்க்கம். நமக்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாக உள்ளது... எல்லா சமய,மதங்கள் மற்றும் அதன் ஆச்சாரங்கள். (எப்படி மேடம் வகுப்பில் சொல்லிய பாடங்களை சரியாக சொல்கிறேனா?). எனவே திருமந்திரம், திருவாசகம் ஓதுதல் இங்கு இல்லை. நமக்கு திருவருட்பா ஒன்றே. அருமையான பதிவு. நன்றியுடன் : டாக்டர் நாராயணி.
Tuesday, April 26, 2016 at 00:17 am by narayani julu
manohar kuppusamy
Dear Brother your statement is wrong. Do some practical of our Vallalar says in Thiruarutpa, then only you can realise the god path.
Please dont give any negative message for the THIRUVASAGAM & THIRUMANTHIRAM.

KINDLY REFER THE PERUUPADASAM --- THE SPEECH GIVEN BY THIRU ARUTPRAKASA VALLALAR AT METTUKUPPAM AND THE COLLECTION OF MESSAGES ONLY. OUR VALLALAR NOT PUT ANY SIGNATURE ON THIS STATEMENT.

MY DEAR BROTHER PLEASE GO THROUGH ALL VINNAPPAM AND KNOWS THE GOD PATH AND OUR THIRU ARUTPRAKASA VALLALAR SIGNATURE AVAILABLE.

THANKS & REGARDS
K.MANOHAR-
Tuesday, April 26, 2016 at 04:32 am by manohar kuppusamy
Logith sharma
Dear MANOHAR sir,

Kindly specify what is wrong here?,specific the line/verse. Also kindly specify what is practical in your sense?. Read the article once again APJ ARUL does not give any negative message on THIRUVASAGAM & THIRUMANTHIRAM. Sir if you know what is said in VINNAPPAM - kindly post it here [Is that Vallalar referred THIRUVASAGAM & THIRUMANTHIRAM in his VINNAPPAM?]

Thanks
Logith
Tuesday, April 26, 2016 at 13:54 pm by Logith sharma
venkatachalapathi baskar
திருவருட்பா உரைநடைப் பகுதியிலிருந்து (உபதேசக் குறிப்புகள்) எடுக்கப்பட்டவை. இவைகளை சரி என்று சொல்வதா? அல்லது தவறு என்று சொல்வதா?

47. திருமந்திரம்

சன்மார்க்க உண்மை தெரிய வேண்டுமாகில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்.

48. திருமந்திரமும் திருவாசகமும்

சாத்திரங்களிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இஃது மொத்தம் எண்ணாயிரம்; தோத்திரங்களிற் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.

வள்ளல் பெருமான் திருவருட்பாவில் கூறியவைகள்:


வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.


வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.
Tuesday, April 26, 2016 at 16:20 pm by venkatachalapathi baskar
Damodaran Raman
திருமதி எபிஜெ அருள் அவர்களே,உங்களுக்குச் சமய அறிவும் சாத்திர அறிவும் கிடையாது என்பதை உங்கள் ஒவ்வொரு பதிவும் தெளிவு படுத்துகின்றது.பதிவின் தொடக்கமே முதல் கோணல்.

நமசிவாய,சிவாயநம என்பது உங்கள் மந்திரமல்ல என்றுதான் குறிப்பிட வேண்டும்.நீங்கள் அகவலைப் பொருளுணர்ந்துதான் படித்தீரா?

அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே
ஐந்தென எட்டென ஆறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியும் மந்திரமே(1315-1318)

இவ்வரிகளின் பொருளை அறிய முயன்றதுண்டா?அகரமும் உகரமும் சேரந்தால் வருவது ஓம் என்னும் பிரணவ மந்திரம்.அழியாச் சிகரமும் வகரமும் சேர்ந்ததுதான் வாய்மை மந்திரமாகிய சிவ என்னும் மந்திரம்.ஐந்தெழுத்து மந்திரம் சிவாயநம.ஆறெழுத்து மந்திரம் ஓம் நமசிவாய.எட்டெழுத்து மந்திரம் ஓம் ஆம் ஔம் சிவாயநம.நான்கெழுத்து மந்திரம் ஓம் சிவாய.இதற்கு உங்களிஷ்டப்படி ஒருபோதும் பொருள் கூற முடியவே முடியாது.முயற்சி செய்துதான் பாருங்கள்.

திருமூலர் திருமந்திரம் முத்தியை மட்டும் தெரிவிக்கும் என்று கூறுவது நீங்கள் திருமந்திரத்தைக் கண்ணால் பார்க்கவும் விரும்பாதவர் என்பதுடன் உங்கள் அறியாமையையும் தெளிவு படுத்தும்.மூன்றாம் தந்திரத்தில் சாகாக்கல்வியைத் திருமந்திரம் நன்கு விளக்குகிறது.

வெட்டியும் ஒட்டியும் உங்கள் விருப்பப் படிக்கூறிவிட்டு அதனை வள்ளலார் கட்டளை என்று எப்படிக் கூறலாம்?சத்தியமாக அது வள்ளலார் இட்ட கட்டளை யாகாது.

கற்க கசடற.
Wednesday, April 27, 2016 at 00:46 am by Damodaran Raman