- என் உயிர் நீ
- என் உயிர்க்கோர் உயிரும் நீ
- என் இன்னுயிர்க்குத் துணைவன் நீ
- என்னை ஈன்ற அன்னை நீ
- என்னுடைய அப்பன் நீ
- என் அரும்பொருள் நீ
- என் இதயத்து அன்பு நீ
- என் நன்னெறி நீ
- என் நற்குரு நீ
- எனை கலந்த நட்பு நீ
- என் தன்னுடைய வாழ்வு நீ
- என்னை காக்கும் தலைவன் நீ
Ref:Thiru Arutpa Song No: 2138 ( {ContentRefr:1347} )

எல்லா சமயங்களிலும் எல்லா மதங்களிலும் இதுவரை கூறப்பட்டுள்ள எல்லா இறைவர்களும் கற்பனையே என்பது வள்ளலாரின் முடிந்த முடிபு..உரை நடையில் ஆண்டவனின் சொரூபம் பரமாகாசம் என்பதே ஆகும். மகாதேவ மாலையிள் 52 வது பாட்டில் மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளியாக்கிகொண்ட வெளியே என்கிறார். புறத்தில் இறைவன் வெளியாகவே இருக்கிறான் அவனுக்கு என்ன பெயர் வேண்டு மானாலும் வைக்கலாம் எல்லாப் பெயர்களும் அவன் பெயரே ஆகும். அகத்திலே அவன் ஒளியாக காட்சி அளிப்பான் அது அனுபவம் ஆகும் இது தவம் செய்தால் மட்டுமே பெறமுடியும். புரத்திலே வேண்டுமானால் வள்ளலாரையே தெய்வமாக வணங்கலாம்.
Thursday, March 17, 2011 at 04:17 am
by Muthukumaaraswamy Balasubramanian
Write a comment