CHIDAMBARAM VALLALAR MANDRAM, CHIDAMBARAM
பாரீஸ் : பிரான்சில் "அருட்பெரும் ஜோதி"
பாரீஸ் : பிரான்சில் "அருட்பெரும் ஜோதி" தனிப்பெரும் கருணை என்ற தாரக மந்திரத்தை இவ்வுலக்கு அளித்த "அருட்பிரகாச வள்ளலார்" என்று அன்னைவராலும் அழைக்கப்பட்ட ராமலிங்க அடிகளாரின் அவதார திருநாள் அக்டோபர் 05ம் தேதி அன்று பாரீஸ் ராமலிங்க பணி மன்றத்தாரால் நடத்தப்பட்டது. அவரின் கொள்கைப்படி "ஜோதி" யாக அவரை வழிபட்டார்கள். அவர் நமக்கு அருளிய "திருவருட்பா"விலிருந்து பல பாடல்களை பாடி வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட சில பிரான்ச் மக்களுக்காக அவரின் திருவருட்பாவை பிரன்ச் மொழியில் மன்றத்தலைவர் சிவசண்முகம் மொழி பெயர்த்தார். பிரான்ஸ் சிவன் கோயில் சார்பில் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரிந்த வைத்தியலிங்கத்தால் "திருவருட்பா" பிரன்ச் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, நூலாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓஷ்ச் ராமலிங்கம், அறிவழகன் மற்றும் மதிவாணன் வள்ளலாரின் கொள்கைகளில் சில வற்றை விளக்கினார்கள். வள்ளலாரின் கொள்கையில் முக்கியமானதாக கருதப்படும் பசித்தவர் அனைவருக்கும் உணவளித்தல் என்பதற்கு ஏற்ப வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பாரீஸ் ராமலிங்க பணிமன்றத்தின் தலைவரும் நிறுவனருமான சிவஷண்முகம் 87வது பிறந்தநாள் காணும் அவருக்கு பொன்னாடை அணிவித்தார். வள்ளலார் நமக்கு விட்டுச் சென்ற நம் வாழ்கைக்கு வழிக்காட்டும் கொள்கையை மனத்தில் சுமந்தபடி அனைவரும் வீடு திரும்பினார்கள்.

நன்றி: ரவி சொக்கலிங்கம்