Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
நித்திய ஆன்மாவும் அநித்திய உடம்பும்...சுவாமி சரவணானந்தா.
நித்திய ஆன்மாவும் அநித்திய உடம்பும்.

சுவாமி சரவணானந்தா.

(இராமலிங்கர் வாழ்க்கை உண்மை என்ற நூலிலிருந்து)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

     மனிதனுக்கு புற உடம்பு, மிக இன்றியமையாத ஒன்றாகும். மெய்யறிவு நிரம்பப் பெறாதவர்கள், விசாரமில்லாதவர்கள் புறத்தோற்ற வடிவத்தையே மனிதனாகக் கருதிக் கொள்ளுகின்றனர். அது சரியல்ல. 

     உண்மை மனிதனுக்கு தேகப்பிறவி உண்டாவதும், நீங்குவதும் அருள் நியதிப்படி உண்டாகின்றதாம். ஆகையால் இயற்கையான உண்மை மனிதன் நிலை. அநித்திய தேகத்திற்கு உள் மறைந்திருக்கும் நித்திய ஆன்ம சொரூபமாகும்.

     இந்த ஆன்மாவே மனிதனின் உண்மை உருவம் என்று கொண்டு விட்டு, புற விளைவு கொண்டிருக்கும் அநித்திய வடிவத்தை அலட்சியப் படுத்தி விடுதலும் அறியாமையேயாம்.

     ஏனெனில், அந்த அக மெய்யுருவம் விளங்கற்கு, இந்தப் புறத் தேகமும் அத்தியாவசியமாய் இருக்கின்றதால், இதுவும் இணைந்திருக்க வேண்டியுள்ளதாம். ஆகவே, “உண்மையான மனிதன் அக ஆன்மாவும், புறத்தேகமும் கொண்டு திகழலே நிறை நிலையாகும்”.

     அவ்வான்மா உண்மையில் கடவுள் அம்சமானது. அக்கடவுள் அருளே, அந்த ஆன்மாவிற்கு உயிர் உடம்பை ஆக்கிக் கொடுக்கின்றதும், வளர்த்துக் கொண்டிருக்கின்றதும், பின்னர் பிரித்து அழிக்கின்றதுமாம். இம் முச்செயலும் ஆன்மாவுக்கு அனாதி காலமாகத் தொடர்ந்து வருகின்றன. ஏன் அப்படித் தொடர்ந்து பிறப்பும் இறப்பும் உண்டாகின்றனவென்றால், “உள்ளிருக்கும் கடவுள் ஞானமும்,  முடிவற்ற கடவுளின்ப வாழ்வும் வெளிப்படுத்தற்காகவே தான்” எனத் திருவருளாலே உணர்த்தப்படுகின்றோம்.

     அந்தக் கடவுள் உண்மை வெளிப்படுகின்றபோது, அருள் உண்மை மலர்ச்சி பெற்று அனக மயமாகிப் புற வடிவையும் தன் வண்ணமாக மாற்றி அமைத்துக் கொள்ளுகின்றதாம். அது முதலாக அந்த அழியா அருள் ஒளி வடிவில், மனிதன் அனக சொரூபியாய் வாழத் தொடங்கி விடுகின்றான். இறப்பும், மேல் பிறப்பும், அர்று நித்தியமாய் விளங்க வல்லவனாகி விடுகின்றான்.

     இதனால், கடவுள் தானே மனிதனில் ஆன்மாவாய் அருகிக் கிடந்ததும், தன் அருளால் பலவாகிய பிறப்புத் தேகங்களை ஏற்று விடுத்ததும், முடிவில் அருள் அனுபவம் கொண்டிலங்கும் அனக மனித வடிவு கொண்டு திகழ்வதும் சத்தியமாகும்.
20140806_082447.jpg

20140806_082447.jpg

20140809_222301.jpg

20140809_222301.jpg