Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
3.12.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாத பூச வழிபாடு
வரும் 3 12 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ஒன்பதரை மணி அளவில் திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாத பூச வழிபாடும் சுவாமிகளின் அவதார தின விழாவும் ஒரு சேர நடைபெற உள்ளன. காலை 9 மணி அளவில் திரு அருட்பா மற்றும் தயவுப்பாக்கல் பாராயணம் அங்கு சன்மார்க்க அன்பர்களால் செய்யப்படும்.

அதற்குப் பின்னர் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய தயா விளக்க விண்ணப்ப வெண்பா என்ற புதிய நூல் அங்கு வெளியிடப்படும். அதில் அடங்கிய கருத்துக்கள் சன்மார்க்க அன்பர்களால் அங்கு விளக்க உரை செய்யப்படும் அதன் பின்னர் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு அன்னதானம் நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென விழா குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20231127_174338_445.jpg

IMG_20231127_174338_445.jpg