Vallalar Universal Mission Trust   ramnad......
அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகர்
அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த 
உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித் திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
திடுதற் கென்றே எனை இந்த 
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே
என்று பாடி நானுரைக்கும் வார்த்தையெலாம் நாயகன் தன் வார்த்தை, நம்புமினோ நமரங்காள்  என்று உறுதி கூறினார் .  இதனை ஆணவம் என்றனர் .  வைதிகச் சைவர்கள்.  ஆணவமாகாது  என்கின்றார் வள்ளலார் காலத்திலேயே வாழ்ந்த வங்கத்து ஞானியான இராமகிருஷணர்.