பசி போக்குதல் என்பதை "வள்ளலாரின் கொள்கை" " மிக உறுதியாக கடைப் பிடிக்கிறது. ஏனென்றால் பசி என்பதே பூமியின் எல்லா பாவங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. பசிப்பிணியை போக்கிவிட்டால் பெரும்பான்மையான பாவத்திற்கான காரணிகளை ஒழித்துவிடலாம் என்பது வள்ளலாரின் கருத்து. ஏனென்றால் ஒரு உயிர் பசி கொண்டது என்றால் முதலில் அதன் உடலும் மனமும் பலவீனப்படும் நல்லது கெட்டது பிரித்தறிய இயலாத மனநிலையில் மயக்கம் ஏற்படும், கோபம் ..மனஉளைச்சல் என பசி ….என்பது எந்த ஒரு உயிரின் நிலையையும் மயங்கச்செய்து… குற்றங்களில் தள்ளிவிடும். இந்த ஒரு காரணத்தாலேயே ஜீவகாருண்யத்திற்கு பிறகு பசிப்பிணி போக்குதல் என்ற கொள்கையை வள்ளலார் தீவிரமாக கையாண்டார்.
Write a comment