ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்னமுடி யாஅவற்றின்
ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
உற்றகோ டாகோடியே
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
சிவஅண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
சீரண்டம் என்புகலுவேன்
உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
உறுசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
ஒருபெருங் கருணைஅரசே
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
வரந்தந்த மெய்த்தந்தையே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.
உன்னமுடி யாஅவற்றின்
ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
உற்றகோ டாகோடியே
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
சிவஅண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
சீரண்டம் என்புகலுவேன்
உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
உறுசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
ஒருபெருங் கருணைஅரசே
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
வரந்தந்த மெய்த்தந்தையே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.
Write a comment