பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே
பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
நிதியெலா மளித்த நிறைதிரு மதியே
பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே
பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
நிதியெலா மளித்த நிறைதிரு மதியே
பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
Write a comment