மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
Write a comment