Vallalar Universal Mission Trust   ramnad......
உலகீர்
உலகீர்

முயன்று பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும்
ஒரு மோசமும் இல்லாதே
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும் 
எம் இறைவன் எழுந்து அருள
இது தருணம் கண்டீர் துயின்று உணர்ந்தே
எழுந்தவர் போல இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது 
இது தொடங்கி நிகழ்ந்திடும்
 நீர் பயன்று அறிந்து விரைந்து வம்மின்..


செய்தாலும் தீமை எல்லாம்
பொருத்து  அருள்வான்
திருநடம் செய் பெருங்கருணைத் திறத்தான்
அங்கு அவனை
மெய்தாவ நினைத்திடுக
சமரச சன்மார்க்கம் மேவுக
என்று உரைக்கின்றேன் மேதினியீர்

எனைத்தான் வைதாலும் வைதிருமிம்
வாழ்த்து எனக் கொண்டிடுவேன்
மனம் கோனேன்

மானம் எல்லாம் போன வழி விடுத்தேன்
பொய்தான் ஓர் சிறிது எனினும் புகலேன்
சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எல்லாம்
புனிதம் உறும் பொருட்டே.... வள்ளலார்..